
விழி மூடி யோசித்தேன்!..
அங்கே சிறகு முளைத்த
சிட்டு அவள்!.....
பேரழகி என்று நான்
அவளைச் சொன்னாள்
நான் என்ன - பெண்கள்
நெஞ்சை கொள்ளை கொள்ளும்
வெள்ளை மாதவனோ?...
வெண்ணிலவு ஜன்னலில் சிரிக்க,
சுடிதார் அணிந்த சொர்க்கமாய்
வெளியே அவள் வந்தால்
என் கண்ணை பிடுங்கிக் கொள்வேனோ நான்?...
நீ முன்னாள் போனால்
நான் பின்னல் வந்து
ஏ! பெண்ணே திரும்பிப் பாரு
என்று சொல்லின்
போடா போடா புண்ணாக்கு
என்று சொல்ல வார்த்தையில்லாமல்
வாடப் போகுது உன் நெஞ்சம்!....
மே மாதத்தில் மேஜரான நீ
ஜூன், ஜூலை மாதத்தில்
ரோஜாப் பூவின் வாசத்தில்
கண்ணாடி பார்க்காமல்
என் முன்னாள் வந்து நின்றால்
ஐயோ அம்மா! என்ற அலறல்
என்னை அறியாமலே
வெளியில் வருமோ?....
நாக்கா, மூக்கா...
கேட்டுக் கேட்டே
நானொரு சிந்து என்று
சொல்லப் போகும் நீ
என்னைப் பார்த்து
போனால் வருவீரோ
என்று கேட்க எத்தனை
நிமிடங்கள் தான் செல்லும்?....
சஹானா சாரலில் நின்று
உன் தலை முடி உதிர்வதை கூட
தாங்க முடியாது தோழா
என்றால் - எந்த தேசத்தில்
நீ பிறந்தாய் என்று
வாய் பிளப்பேனோ நான்?...
அக்கம், பக்கம் யாருமில்லாத
பூலோகம் வேண்டுமென்று
என்னை நீ அழைத்துச் சென்றால்
என் மறு மொழி எல்லாம்
யார் யாரோ நான் பார்த்தேன்
யாரும் எனக்கில்லை
என்பதாய் தான் இருக்கும்!...
இதெல்லாம் தேவை தானா எனக்கு?
(இப்படி ஒரு டூயட்டா? தயவு செய்து திட்டாதீங்க. பின்னூட்டல் மட்டும் இட்டுட்டுப் போங்க....)
பிறந்த நாள் வாழ்த்து
(இன்றைய தினம் இலங்கையின் ஆரம்ப கால சூரியன் அறிவிப்பாளரும், எம் போன்ற இளைய தலை முறைக்கு ஒரு முன்மாதிரியுமான, வலையுலகிலும் அறிவிப்பாளர்களுக்கு மிகவும் பிரயோசனமான அவரது அனுபவங்களை பதிவாய் இடும் மூத்த அறிவிப்பாளர் ரமணன் அண்ணா பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார். அவருக்கு இதயம் திறந்து இன்ப வாழ்த்துக்களை வலையுலக நண்பர்கள் சார்பாகத் தெரிவித்துக் கொள்வோம். தமிழ் பற்றும், கனீரென்ற குரல் வளமும் மிக்க அவர் நிச்சயம் ஒரு நல்ல அறிவிப்பாளருக்கான சின்னம். அண்ணா.... வாழ்த்துக்கள்.... )
அப்போ நான் வரட்டா!....
உங்கள் நண்பன்
அபூ.....