திங்கள், 8 மார்ச், 2010

ஜீவராகம்!......

அது ஒரு காலம். வசந்தம் வானொலியில் என் குரலும் ஒலியலையில் சங்கமித்த நேரம் சந்தோஷத்தில் மூழ்கிய பொழுதுகள் அவை. ஈர இரவுகளில் இதயங்களோடு கதை பேச ஜீவராகம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க என்னுடைய சக அறிவிப்பாளர்கள் என்னை வேண்டிக் கொண்ட பொழுதுகள். ஜீவராகம் தயாரிப்பாளர் Suhail Ismail , நண்பன் Affa ..... , நண்பன் Askar , ATM Fasly முகாமையாளர் ஜீவா. இயன்ற அளவு முயன்று வாரத்தில் ஒரு நிகழ்ச்சியை இதமாய் இதயங்களுக்குக் கொடுத்த பொழுதுகளின் நினைவாய்த் தான் இன்றைய இந்தக் கவிதை. (நன்றி Suhail , Affa , Asker , ATM Fasly & Jeewa Sir - இவங்க எல்லாம் வசந்தம் வானொலியின் அறிவிப்பாளர்கள் )



இனி தொடர்கிறேன் அந்த இனிய நினைவுகளை....

இருள் சூழ்ந்த
இராப் பொழுதில்
இதயங்களோடு கதை பேசினேன்!..
இசையும் கூடவே கை கோர்த்தது!.......




இதயத்தில் பூத்த
இன்பமான சில வரிகள்
இவன் கவியாய் உருப் பெற்று
இதயங்கள் பல தொட்டது!......

இல்லாதது பல சொல்லி கவி சொல்ல
இஷ்டமில்லை எனக்கு!.....




தூரத்து நிலாக்காட்டி
தூங்க வைக்கிறாள் அன்னை!....
தூறலாய் சிந்தும் சில வரிகளில்
தூது சொல்வதாய் மாற்றினேன் என்னை!......

வசீகரா பாடலின் இடையிசை
வஞ்சமில்லாது பின்னணி இசை கொடுக்க
வந்திட்ட வார்த்தைகளோடு
வலம் வந்தேன் 97 .6 (FM) ல்.......





ஜீவராகம்
ஜீரணிக்கப் பட்டது
ஜீவன்கள் பலரால்!......

கிழமைக்கு ஒரு நிகழ்ச்சி!....
கிடைத்தது பலகோடி மகிழ்ச்சி!.....

இருளுக்கு ஒளி வட்டமாய் ஒரு பால் நிலா!....
இதயங்களுக்கு இன்பகரமாய் இவன் உலா!.....

தேன் நிலவும்,
தேடிய இசையும்,
தேவதையாய் துணை நிற்க.......
தேன் சிந்திய சிதறல்களால்
தேகம் நனைத்தேன்!.....




இருட்டி விட்ட இராப்பொழுது!......
இளமை கொஞ்சும் வெண்ணிலா!....
இருளகன்ற வசந்தம் கலையகம்!.....
இத்தனைக்குள் இளையவன் இவனும் ஒருவனாய்!.....

விண்மீன்கள் கண்சிமிட்டும் நேரம்....
நிறைநிலா நெழிந்து கொண்டு
கொட்டாவி விடுகையில்....
இனிதான அந்த ஜீவராகத்தில்
இவனோடு இதயங்கள் பலகோடி!......





இசை கொண்டு,
இதயம் சென்று
இன்பம் கொடுத்ததில்
இரட்டிப்பு மகிழ்ச்சி
இன்றும் எனக்கு!.........

நன்றி ஜீவராகம்.........


உங்கள் நண்பன்

அபூ.......

சனி, 27 பிப்ரவரி, 2010

நேசம் மறக்கவில்லை நெஞ்சம்!.......




சிந்தும் மழைத் துளியில்
சிறுகனம் வியந்தேன்!....
சிரித்த உன் முகத்தின்
சிதறல்களாய் தான் ஒவ்வொரு துளியும்!.......




எட்டு வயது எனக்கு......
எழுதத் தெரிந்தது
எழுத்துக்கள் பலது!.....
எண்ணங்கள் சிலது
எடை போட்டது மனது!.........

பள்ளிக் காலமது!.....
பகற் பொழுதென்ன?....
பசிப் பொழுதென்ன?...
பக்கத்தில் இருந்து
பகிர்ந்து கொண்டாய் பாசப் பிணைப்பை!......

எனக்கான தோழி
என்று நீ இருக்க
எதுவாயினும் உனக்கு
எத்தி வைப்பதில் சலனமில்லை எனக்கு!......

குடும்பமென்ன?..
குறை நிறையென்ன?..
குட்டிக் கதையாய் - உன்னிடம்
கொட்டி வைப்பதில் கோடி இன்பமடி எனக்கு!.....

உயர்தரம் முடித்த பிறகு
உறவுகளில் ஒரு விரிசல்!....
உயிர்கள் எம் முகவரி
உணர்வுகள் அற்று
உயிரிழந்து கிடக்கிறது!.......



பிரிவு பிரிக்கப் படவில்லை....
பி (ப் )ரியப் படுத்துகிறது!.........
பிரிந்த பின் தான் உணரப் படுகிறது
பிரிவில் எங்கோ நேசம் இருக்கிறது என்பதை!......



பி(ப்)ரியத்துடன்

உங்கள் நண்பன்

அபூ!........

புதன், 17 பிப்ரவரி, 2010

கொஞ்சும் கவிதைகள்!...

(மீண்டும் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் பதிவுலகில் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. நேற்று இரவு கொஞ்சிக் கொஞ்சி என்னோடு பேசிய சின்னச் சின்ன சிந்தனைகளை கொஞ்சும் கவிதைகளாக இன்றைய பதிவில் உங்களுக்காய் பதிவிடுகிறேன். கவிமழையில் நனைந்து விட்டு உங்களுடைய கருத்துக்களை தெரிவியுங்கள். )


உருகும் மெழுகாயினும்
உள்ளம் மகிழ்கிறேன்!...
உயிர் துறப்பதெல்லாம்
உனக்காக வேண்டி என்பதால்!.....

*********************************************



நேசம் கொண்டாய்
நேசிக்க மறுத்தேன்!........
நேர் கோடாய் நின்றாய்
நேரெதிரே நின்றேன்!......
நேற்றுத் தான் நேசம் என்பதை உணர்ந்தேன்
நேரம் பார்த்து வந்த உன் மரணச் செய்தி கேட்டு!......


***********************************************************************



அழகிய பூக்கள் அத்தனையும்
அசிங்கமாய் தோன்றுகிறது!......
அயலாரிடம் வினவினால்
அப்படி இல்லை என்கிறார்கள்!...
அடியேன் இன்னும் உணரவில்லை....
அனல் தெறித்த உன் பார்வை
அம்புகள் தான் என் கண்ணில் இன்னும்
அடாவடித் தனம் புரிகிறது என்பதை!........


********************************************************





வானவில்லின் வர்ணத்தை
வார்த்தெடுத்து வரைந்திட்ட
வான்மதியே!.......
வாழ்வியல் சோதனையில்
வாலிப கோளாறு
வாட்டி வதைக்கிறது
வாட்டசாட்டமான உன் உருவம் பார்த்து!.....
வாராயோ.. நீயும் என்னில் காதல் கொள்ள!......


****************************************************************




முந்தானையால் முடிச்சுப் போட்ட நீ
முகத்திரை கிழித்து - என்
முகம் பார்ப்பது எப்போது?....
முடியவில்லை!.....
முக்காடிட்ட உன்
முறுவல் காணாமல்
முக்கால் மணி நேரம் கூட இருக்க!......
முல் வேலிக்குள் அடை பட்டு
முடங்கிக் கிடக்கிறேன்!.....
முதுமை அடையுமுன்
முழு சம்மதத்தோடு - காதல்
முகவரி கொடு சிநேகிதியே!.......

********************************************

(சரி, கவி மழையில் நனைந்து விட்டீங்களா?...... எப்படி இருந்தது என்று உங்கள் கருத்தை கட்டாயம் சொல்லி விடுங்க. சில நாட்களாக என் பாடசாலை நண்பர்கள் ஏராளமானவர்களை முகப் புத்தகம் வாயிலாக சந்தித்து வருவதில் பெரிய சந்தோசம். ஏனெனில் என் கலைத் துறையின் வளர்ச்சிக்கு என் குடும்பத்திற்கு பின்னர் மூல காரணமாக இருந்தவர்கள் என் பள்ளித் தோழர்கள் தான். கோடான கோடி நண்பர்களே. ) - (ஆசை FM ல் மறுபடியும் திரைப் படத்திலிருந்து "நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் " பாடல் கேட்டுக் கொண்டே இந்தபதிவு.......)

மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம் !.......
அது வரையில் நல்லதையே சிந்திப்போம்!.....

அப்போ நான் வரட்டா!...

உங்கள் நண்பன்

அபூ!.....

சனி, 26 டிசம்பர், 2009

நீங்களும் சொல்லுங்கள்......

இப்போதெல்லாம் அதிகமாக பதிவு எழுத வேண்டும் என அவாக் கொள்கிறேன். (வேலைகள் எதுவும் இல்லாததினாலோ?... பாவம் நிறுவன முகாமையாளர்...) ஆனால் வித்தியாசமாக எழுத வேண்டும் என்கிற ஒரு ஆசை எல்லோரையும் போல் எனக்கும் இருக்கிறது. அதனால் தான் என் தளத்திற்கு வந்து என் ஆக்கங்களை வாசித்து விட்டு கருத்துக்கள் சொல்லும் நண்பர்களாகிய உங்களிடம் இந்த புதிய முயற்சிக்கு கருத்துக் கேட்கலாம் என நினைத்து இந்தப் பதிவை எழுதிகிறேன்.



இப்போதெல்லாம் ஊடகங்களின் பெருக்கம் அதிகரித்திருக்கின்றது. குறிப்பாக வானொலி, தொலைகாட்சி சேவைகள். இந்த ஊடகங்களில் கடமையாற்றும் ஒலி/ ஒளிபரப்பாளர்களின் வெற்றிக்கு முக்கிய காரணியாக இருப்பவர்கள் அவர்களுடைய நேயர்கள். நேயர்கள் கொடுக்கும் ஆதரவில் தான் அவர்களுடைய வெற்றியோ, நிகழ்ச்சியினுடைய வெற்றியோ தங்கி இருக்கிறது. தன்னுடைய குரல் வளம், தேடலின் வேகம், நிகழ்ச்சியில் புகுத்தும் புதுமைகள் தான் அந்த அறிவிப்பாளரை நேயர்கள் மத்தியில் மிளிரச் செய்கிறது. இப்படிப் பட்ட ஒலி / ஒளிபரப்பாளர்களுக்கு எனது வலைத் தளத்தினூடாக ஊக்கம் கொடுக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருக்கிறது. (நான் அறிவிப்பாளராக இருந்த காலத்தில் எனது நேயர்கள் எனக்கு கொடுத்த ஆர்வம், உற்சாகம் இதற்கு ஒரு சான்று ).









அவர்களது நிகழ்ச்சிகளை வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ, இணையத்திலோ கேட்டு விட்டு அந்த நிகழ்ச்சியைப் பற்றி ஒரு விமர்சனம் எழுதலாம் என எண்ணுகிறேன். (ஒரு காலத்தில் அறிவிப்பாளனாக இருந்த நான் இப்போது கடல் கடந்து இருப்பதால் அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் நேயராக மாறி இருக்கிறேன்.) சூரியனின் முகாமையாளர் நவா அண்ணா அவருடைய ஒரு பதிவிலே இலங்கையைப் பொறுத்த வரையில் வானொலி அறிவிப்பாளர்கள் தான் நட்சத்திரங்கள் எனக் கூறி இருக்கிறார். எனவே சினிமாவைப் பார்த்து அந்த நட்சத்திரங்களையும், அவர்கள் படங்களை விமர்சிப்பதிலும் முந்தியடிக்கும் நாம் எமது நட்சத்திரங்களையும், அவர்களது நிகழ்ச்சிகளை விமர்சிப்பதிலும் ஏன் பின் நிற்கிறோம் என எண்ணிக் கொண்டு தான் இப்படியான ஒரு ஊகத்தை எடுத்திருக்கிறேன். நிச்சயம் இது அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு ஒரு நல்ல விமர்சனமாக இருக்கும். (அவரை எந்த வகையிலும் புண் படுத்துவது இதன் நோக்கமாக இருக்காது. மாறாக அவரை இன்னும் ஊக்கப் படுத்த வேண்டும் என்பதே இந்தப் பதிவின் நோக்காக இருக்கும்... இதன் மூலம் வானொலி நிகழ்ச்சிகள் சில வேளை வெற்றி நடை போடலாம். இப்போதும் ஒரு சில நிகழ்ச்சிகள் வெற்றி நடை போடுகிறதை மறுக்க முடியாது. )

வலைத் தளத்தைப் பொறுத்த வரை இங்கே ஏராளமான ஒலி / ஒளிபரப்பாளர்கள் வெற்றி நடை போடுகின்றார்கள். அவர்கள் வழி தவறியேனும் என் தளத்திற்கு வர வாய்ப்புக் கிடைத்தால் சில வேளை அவர்களது நிகழ்ச்சி பற்றிய விமர்சனம் அவர்களது கண்ணுக்கு கிட்டலாம். எனவே இதன் மூலம் யாரோ ஒருவர் நம் நிகழ்ச்சியை அவதானித்துக் கொண்டிருக்கிறார் (விமர்சனத்துக்காக ) என்கிற சந்தோசம் பிறக்கும் இல்லையா?..... எனவே அவருக்கு இருக்கிற ஊக்கம், நம்பிக்கையை விட இன்னும் அதிகமாக சந்தோசம், தன்னம்பிக்கை பிரக்குமில்லையா? (இது என்னோட தனிப்பட்ட எண்ணம் மாத்திரமே....). எனவே தான் இந்த முயற்சியில் இறங்கி இருக்கிறேன்.

இனி நீங்கள் தான் சொல்ல வேண்டும். நான் எடுத்து இருக்கும் இந்த புதிய முயற்சியை நீங்கள் வரவேற்கிறீர்களா? இப்படியான விமர்சனங்களை நீங்கள் எதிர் பார்க்குறீர்களா? உங்களுடைய எதிர் பார்ப்பையும், கருத்துக்களையும் பொறுத்துத் தான் தொடர்ந்து இந்த ஆக்கத்தினை எழுதுவதா? இல்லையா என முடிவு செய்யலாம் என்று இருக்கிறேன். எனவே பின்னூட்டல் மூல உங்களது கருத்துக்களை சொல்லுங்கள்.

மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.....
அதுவரையில் நல்லதையே சிந்திப்போம்!.....

அப்போ நான் வரட்டா

உங்கள் நண்பன்

அபூ..........

புதன், 23 டிசம்பர், 2009

கலைஞர் டிவியும், கிக்கான அரிசிக் கஞ்சியும்.....

இப்போதெல்லாம் அதிகமாக இணையத்தில் உலா வரக் கிடைப்பதில்லை. அலுவலகத்தில் இருக்கின்ற அதிகமான வேலைகள் தான் இதற்கு காரணம் எனச் சொன்னால் கூட தப்பில்லை. அந்த அளவு தலைக்கு மேல் வேலை. என்ன செய்ய? கிடைக்கின்ற சின்ன இடை வெளியில் எங்காவது ஒரு சில பக்கங்களை நுனிப்புல் மேய்வது, அப்படியே அடிக்கடி முகப் புத்தகம் சென்று நண்பர்களின் முகங்களைப் பார்த்துக் கொள்வது என்று காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வேலைப் பளுவெல்லாம் இந்த December முடியும் வரை தான். அதன் பிறகு ஐயா இணையத்திலே தான் இருப்பார். (அப்போ வேலை வெட்டி இல்லாதவன் தான் என்று யாரோ பேசிக்கிறாங்க............. இருக்கலாம்.....)

அலுவலகத்தில் வேலை முடித்து room போனால் ஒரு சின்ன மகிழ்ச்சி கிட்டுவதற்காய் தொலைக் காட்சி பார்ப்பது எனக்கு மட்டுமல்ல, எம் எல்லோருக்குமே பழக்கமாய் மாறி விட்டது. ஆனால் அதே தொலைக் காட்சிகள் தொல்லைக் காட்சிகளாக மாறியிருப்பது தான் மிகப் பெரிய கவலையாக இருக்கின்றது. நேற்று கொஞ்சம் ஓய்வாக இருந்ததாலும், உடலுக்கு கொஞ்சம் சோர்வாக இருந்ததாலும் கூடுதலான நேரம் தொலைக் காட்சியில் பொழுதை போக்க வேண்டி நேர்ந்தது. (யார் செய்த கொடுமையோ?....) அதுவும் கலைஞர், இசைஅருவி, கலைஞர் சிரிப்பொலி என ஐயாவுக்கு சொந்தமான (அதாங்க நம்ம அண்ணன் ) channelகளையே மாற்றி மாற்றி பார்க்க வேண்டி நேர்ந்தது. (இவைகள் தான் இலவச ஒளிபரப்பை வழங்குவதாலோ?.... ஹி....ஹி....) என்ன கொடும சரவணா?....... சினிமாவில் பாடலுக்கா பஞ்சம்?... அதுவும் சினிமாவுக்கே (குறிப்பா கலைக்கே ) பெயர் பெற்ற இந்தியாவிலா? ஒளிபரப்பாக்கப் பட்ட பாடல்கையே திரும்பத் திரும்ப ஒளிபரப்பாக்குவதில் அப்படி என்ன திருப்தி அவர்களுக்கு?...






கலைஞர் TV பக்கம் சென்றால் அவர்களுக்கே உரித்தானது போல் சில பாடல்கள். (பாடலைப் பட்டயடிப்பது தான் இவர்களது நோக்கமோ?...ஆதவன் பாடலையும், கந்தக் கோட்டை, யோகி, ரேணிகுண்டா பாடல்கள் இப்போது களத்தில்.....) அந்தப் பாடல்களையே திரும்பத் திரும்ப ஒளிபரப்பாக்கி இரத்த அழுத்தத்தை கூட்டுவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. (என்ன மாதிரி tension கொடுக்குறாங்க தெரியுமா?.... ) சரி பார்த்துப் பார்த்து பழகிப் போனதால் பெரிசாக அலட்டிக் கொள்ளாமல் சிரிப்பொலி போனால் அங்கேயும் அதே விளையாட்டு..... (ஒரே காமடியாவே இருக்கு.... வெவ்வேறு படங்களிலிருந்து காட்சிகள் ஒளிபரப்பினால் ஒரே சபாஷாக இருக்கும்.......) பின்னால் இசையருவி போனால் அங்கேயும் அதே திருவிளையாடல். (இவர்கள் தான் கலைஞர்கள்..... நான் சொல்லலீங்க.....) எத்தனையோ கலைஞர்கள் இந்தியாவிலே இருக்கிறார்கள். அவர்களுக்கு நிறைய்யவே சந்தர்ப்பம் கொடுக்கலாம் இந்த தொலைக் காட்சிகளிலே. ஆனால் ஒரு சிலருக்குத் தான் அதில் நிறையவே சந்தர்ப்பம் இருக்கிறது. நல்ல உதாரணம் தான் கலைஞர் டிவி, சிரிப்பொலி மற்றும் இசையருவி அத்தனை அலைகளிலும் ஒளிபரப்பாக்கப் படும் விளம்பரங்களிலும் குரல் கொடுக்கும் அந்த மன்மதக் குரலாளன். தனக்கே சொந்தமான தாய் மொழியை எவ்வளவு கஷ்டப்பட்டு உச்சரிக்கிறார் என்பதை பார்க்கும் பொது தான் அந்த குரல் மீது அளவு கடந்த பரிதாபம் ஏற்படுகிறது. (ஒவ்வொரு விளம்பரத்துக்கும் பின்னால் நிச்சயம் அவர் ஒரு முட்டையாவது குடிக்க வேண்டும். ...... அப்படி கஷ்டப் பட்ராருங்க தமிழ் உச்சரிப்புக்கு......பாவம் சாமி....) ஏன் அவரை மட்டும் வைத்துக் கொண்டு ஒலிப்பதிவு செய்கிறது இந்த கலைஞர் குடும்பம் (ஒரு வேளை சொந்தக் காரராக இருப்பாரோ?....) பாவம்....... அந்த குரலுக்குரியவர். (அவருடைய பெயர் தான் தெரியல....... தெரிந்தும் என்ன தான் செய்ய?.... என்னைப் பொறுத்த வரை அவர் அவ்வளவு பெரிய கலைஞன் அல்ல...)

அதே நேரம் சில நல்ல நிகழ்ச்சிகளையும் கலைஞர் டிவி ஒளிபரப்பாக்குகின்றது. மானாட மயிலாட... (நிறையப் பொண்ணுக ஆடுரதால.....), விசாரணை, வானம் பாடி, இப்படி ஒரு சில நிகழ்ச்சிகள் பார்க்கக் கூடிய முறையில் ஒளிபரப்பாகப் படுகின்றது. அதற்கு சின்னதா ஒரு சபாஷ் போடலாம். அவ்வளவு தான். இன்னுமொரு முக்கியமான விடயத்தை குறிப்பிட்டாக வேண்டும். SS Music எதேர்ச்சையாக நேற்று கூடுதலான நேரம் பார்வையிட நேர்ந்தது. ஒரு பெண் தொகுப்பாளறது Just Connect என்கிற நிகழ்ச்சியை கிட்டத் தட்ட ஒரு மணித்தியாலம் வரை பார்க்க கிடைத்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. எனக்குப் பிடித்த ஒரு விடயத்தை பற்றி நேற்றைய நிகழ்ச்சியில் அந்த தொகுப்பாளினி ரொம்ப நன்றாகப் பேசியிருந்தார். அதாவது வாசிப்புத் தான் கருப்பொருள். பிடித்த எழுத்தாளர், வாசித்த புத்தகம் என்று சொல்லி நிறையவே ரசிகர்களோடு பேசினார். (இனி அதில் என்ன? எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே அது?.... ன்னு யாரோ சொல்றாங்க.....) இதில் முக்கியமான விடயம் அந்த தொகுப்பாளினி அழகான முறையில், சரளமாக ஆங்கில மொழியில் தொகுப்பை செய்தது தான். நிகழ்ச்சி முழுக்க ஆங்கில மொழியிலே தான் இடம் பெற்றது. ஆனால் ஒளிபரப்பாக்கப் பட்ட பாடல்கள் அத்தனையும் தமிழ் பாடல்கள். (தொகுப்பாளினிக்கு நிச்சயம் எல்லோரும் சேர்ந்து ஒரு பெரிய சபாஷ் கொடுக்கத் தான் வேண்டும்....) சிறப்பாக இருந்தது அந்த நிகழ்ச்சி. நிச்சயமாக அந்த நிகழ்ச்சி எனக்கு ஒரு பெரிய திருப்பம் கொடுத்தது. (ஆங்கிலமா? உனக்கு ஆங்கிலம் தெரியாம எப்படி ஆங்கில நிகழ்ச்சின்னு என் நண்பர் ஒருவர் பக்கத்துல இருந்து அலட்டிக் கொல்றாரு.... நான் இப்போ சரளமாக ஆங்கிலம் பேசுவதை அறியாமல்..... ஒரே காமடியாகவே இருக்குது இல்லையா?....)





சரி, என்ன தலைப்புக் கேற்ற விடயம் இன்னும் வரவில்லைன்னு யாரோ பேசிக்கிறாங்க. இதோ வந்துட்டேங்க.. கலைஞர் TV கொடுத்த சோர்வு, சவூதியின் குளிர் கொடுத்த கொடுமை அந்த மாலைப் பொழுதில் ஒரு கஞ்சி குடித்தால் நல்ல ஒரு உற்சாகத்தை உடம்புக்குக் கொடுக்கும் என தோன்றியது. எழும்பி ஒரு கஞ்சி கோப்பை தான் குடித்தேங்க.... (சத்தியமா ஒரு கோப்பை தாங்க.....) என்னமா உற்சாகம்.?...... அந்த உற்சாம் தான் இன்று காலை 8 மணியில் இருந்து இது வரை இந்த ஆக்கத்தை type பண்ண உதவியது. (அப்போ எவ்வளவு உற்சாகம் இந்த அரிசிக் கஞ்சி கொடுத்திருக்கும்னு பாருங்க......... ) அப்ப பாருங்களே இவர் கலைஞர் டிவி பார்த்துட்டு கஞ்சி குடித்திருக்கிறார். ஹி..... ஹி....... (யாருமே பண்ணாத ஒரு வேலையைப் பண்ணிருக்கிறார்.....) - கொஞ்சம் சிரிப்பீங்க என்ற நம்பிக்கைல தான் இந்தப் பந்தி.... அப்போ சிரிங்க..... நன் போயிட்டு வாறன்...

மற்றுமொரு பதிவில் சந்திப்போம்...... அதுவரையில் நல்லதையே சிந்திப்போம்.....

அப்போ நான் வரட்டா

உங்கள் நண்பன்

அபூ......

சனி, 12 டிசம்பர், 2009

வானொலிக் கலை....




நீண்ட நாட்களுக்குப் பின்பு மீண்டும் பதிவுலகில் உங்களோடு இணைவதில் மிகுந்த மகிழ்ச்சி.... தொடரும் மகிழ்ச்சியோடு தலைப்புக்கு வருகிறேன்.

அன்றாட தொழில் எதுவோ அது வீணாக்கப் படாமல் ஒரு துணையாக, தொழிலுக்கு ஊக்கம் அளித்துக் கொண்டிருப்பது வானொலி எனும் ஊடகமே ஆகும். உலகின் எந்த நாட்டுக்கும், எது வித அனுமதியுமின்றி, யாவருடைய இல்லங்களுக்கும் தங்கு தடையின்றி நுழைந்து கதிரை போட்டு அமர்ந்து கொள்வது இந்த வானொலி என்கிற ஊடகமாகும். நவநாகரீக கணணி யுகத்தில் தன்னிலை குன்றாது தலை நிமிர்ந்து இந்தளவுக்கு உயிரோட்டம் பெறுகிறதென்றால் அந்த ஊடக அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சிகளில் புகுத்தும் புதுமைகள் தான் காரணம் எனலாம். (உதாரணத்துக்கு இன்றைய காலத்தில் நம்ம பதிவுலக ஜாம்பவன்களின் நிகழ்ச்சிகளே போதும்... லோஷன் அண்ணாவின் விடியல், ஹிஷாமின் கற்றது கையளவு, சந்துருவின் எங்கேயும் எப்போதும்......... அப்படியே நீள்கிறது பட்டியல்.......)

வானொலி ஒலிபரப்பு என்பது அறிவியலின் அடிப்படையில் தோன்றிய ஒப்பற்ற கலையாகும். அது சரி, ஏன் இவன் இன்னக்கி வானொலி பற்றியே பேசிட்டு போறான்? இவனுக்கு ஏதாவது நடந்து விட்டதோ என நீங்கள் எனக்காக ஏங்குவதும் எனக்கு விளங்காமலில்லை. என்ன செய்ய? சொல்ல வேண்டிய நிற்பந்த நிலை. சொல்லித் தான் ஆக வேண்டும். அதனால் சொல்கிறேன்.

ஒலிபரப்புக் கலை குறித்து பல ஆண்டுகளுக்கு முன் சோ. சிவபாத சுந்தரம் எழுதிய நூல் பற்றி நான் சில தகவல்கள் கேள்விப் பட்டிருக்கிறேன். (அந்த நூலை தேடி படிக்க வேண்டும் என ஆசைப் பட்டேன். ஆனால் அது இதுவரையில் என் பார்வைக்கு அந்த நூல் எட்டவில்லை.) அதன் பின்னால் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் "வானொலிக் கலை " என்கிற அறிவிப்பாளர்களுக்கு மிகவும் பிரயோசனம் மிக்க ஒரு நூலை வெளியிட்டிருக்கின்றார் இலங்கை வானொலியின் பயிற்ச்சிப் பட்டறையில் உருவான விமல் சொக்கநாதன் அவர்கள். (அதை எல்லாம் ஏன் இங்க எழுதுராய்னு நீங்க கேட்பது விளங்குது. )2007 ம் ஆண்டு காலப் பகுதியிலே தான் இந்த நூல் பற்றி நான் அறிந்தேன். அன்றிலிருந்து இன்று வரை அந்தப் புத்தகத்தை பல புத்தகசாலை சென்று தேடி இருக்கிறேன். இது வரையில் என் கைக்கு அந்த நூல் கிட்டவில்லை. (இனி நாங்க என்ன பண்ணவான்னு நீங்க முறைக்கிறீங்க......) அப்படி இருக்கையில் இன்றைய பதிவாய் இந்த விடயத்தை நான் பதிவிடுகிறேன் என்றால் ஒரு காரணமும் இல்லாமல்இல்லை.

வானொலி அறிவிப்புத் துறையை காதல் கொள்ளும் நான் (சில காலங்கள் அந்தக் காதலிக்கு காதலனாய் இருந்ததில் அளவில்லா ஆனந்தம் ஒரு பக்கம் இருக்கத் தான் செய்கிறது.....) எப்படியாவது இந்த நூலைப் பெற வேண்டும் என ஆசை கொண்டு இலங்கையின் பல புத்தக சாலையில் இந்தப் புத்தகத்தை நான் கடல் கடந்து வருவதற்கு முதல் தேடி அலைந்தேன். ஆனால் கடைசி வரை அது என் கண்ணுக்குத் தெரியவுமில்லை. கைக்கு கிட்டவுமில்லை. (கைக்கு கிட்டலன்னா கிட்டியதக் கொண்டு வேலையைப் பாருன்னு யாரோ சொல்றாங்க போல....)

அந்த நூல் பற்றி இன்றைய தினம் பதிவிட முக்கிய காரணம் "வானொலிக் கலை " என்கிற இந்த நூலை இந்தியாவில் மிக இலகுவாகப் பெற்றுக் கொள்ளலாம் என நான் கேள்விப் பட்டிருக்கிறேன். எனவே தான் இன்றைய பதிவில் இது பற்றி பதிவிடுகிறேன். என் பதிவுக்கு ஏராளமான இந்திய சொந்தங்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் நிச்சயம் இந்த உதவியைப் பண்ணுவார்கள் எனும் நம்பிக்கையில் தான் இந்தப் பதிவை இடுகிறேன். (எந்த நாட்டில் கிடைத்தாலும் பரவா இல்லை...)

நூல் : வானொலிக் கலை
ஆசிரியர் : விமல் சொக்கநாதன்
விலை : 125 இந்தியா ரூபா..

என் வலையுலக நண்பர்கள் (குறிப்பாக இந்திய சொந்தங்கள் ) எப்படியாவது இந்த நூலை தேடித் பெற்று என் கரம் சேர்க்க முயற்சி பண்ணுவீர்களா? அந்த முயற்சி வெற்றி அடையும் பட்சத்தில் அந்த நூலுக்கான பெறுமதியினை நான் உங்களுக்காக வழங்கக் காத்திருக்கிறேன். (அட, இப்படியுமா??? என நீங்கள் யோசிக்க வேண்டாம். இந்த நூலைத் தேடி நான் அலையாத இடமில்லை. ஆனால் எப்படியாவது இந்த நூலைப் படிக்க வேண்டும் என்கிற ஓர் ஆர்வம் என்னிடம் இருக்கிறது.) அதனால் தான் என் நண்பர்கள் உங்களிடம் சொல்லி இருக்கிறேன். முடியுமானால் முயற்சி பண்ணிப் பாருங்கள்...... புத்தகம் கிடைத்தால் பின்னூட்டத்தில் எழுதுங்கள். அதற்கான வெகுமதியைத் தந்து விட்டு உங்களிடமிருந்து நான் அந்த நூலைப் பெற்றுக் கொள்கிறேன்.

எதிர் பார்ப்போடு................................

மற்றுமொரு பதிவில் சந்திப்போம் .... அதுவரையில் நல்லதையே சிந்திப்போம்....

அப்போ நான் வரட்டா....

உங்கள் நண்பன்

அபூ.......

செவ்வாய், 6 அக்டோபர், 2009

ஆசான்....



இன்றைய தினம் சர்வதேச ரீதியில் ஆசிரியர் தினம் கொண்டாடப் படுகிறது. இந்த ஆசான்களை கெளரவிக்க, மரியாதை செய்ய, நினைவு படுத்த தனியாக ஒரு நாள் தேவை இல்லை. இருந்தாலும் அவர்களுக்காக ஒதுக்கிய நாள் என்பதால் ஆசான்களுக்காக வடித்த ஒரு கவிதையை இன்றைய பதிவில் பதிவிடுகிறேன்.

ஆனால் இன்றைய தினம் என் பாடசாலை வாழ்வில் கழித்த ஆசிரியர் தின நாட்களும், கடந்த வருடம் வசந்தம் வானொலியில் ஆசிரியர் தினத்தன்று செய்த நிகழ்ச்சியும் என்னோடு தனியாக கதை பேசிக் கொண்டிருக்கிறது.

சரி வாங்க கவிதையை பார்ப்போம்....



ஆறு வயதில் அறிவைத் தேடி
அனுமதி பெறுகையில்
ஒரு ஆசானாய்க் கண்டேன் உன்னை!...

அன்பால் அரவணைத்து
அகமகிழ வார்த்தைகள் சொல்லி
அனுதினமும் மகிழ வைத்தாய் என்னை!...

கேள்விகள் பல கேட்டு
கேடயங்கள் பல கொடுத்து
கேலிகூத்திலிரிந்து
விளக்கி வைத்தாய் என்னை!....

பரீட்சைகள் பலதில்
பார்போற்ற புள்ளிகள்
படைக்க வைத்தாய்!....

களைகள் என்னில் பிடுங்கி
கலைஞனாய் என்னை வளர வைத்த
கல்விமான் நீ!....

எட்டாத காய் பார்த்து
எண்ணங்கள் வளர்க்காதே
என்ற பொன்மொழி தந்தவன் நீ!...

விடியும் விடியல்களை
விருட்சங்களாய் மாற்றியன் நீ!....

என் கவி வரிகளுக்கு
என்றுமே கருப்பொருள் நீ!....

நான் விழுமியம் பெற
விழித்திருந்த ஆசானே!....
காலமெல்லாம் உன் சேவை
இறை ஆசியுடன் தொடர
காளை இவனின் வாழ்த்துக்கள்!.....

(2005 ஆம் ஆண்டு இதே நாள் என் பாடசாலை வாழ்வின் விடுகை வருட கடைசி ஆசிரியர் தின நிகழ்ச்சியை ரொம்ப விமர்சையாக நடத்தினோம். காலை 9 மணி தொடக்கம் 3 மணி வரை நிகழ்ச்சி சிறப்பாய் நடந்தேறியது. விசேடமாக எல்லா ஆசிரியர்களையும் மேடை ஏற வைத்தது, பாடல் பாட வைத்தது, நடனம் ஆட வைத்தது, அவர்களுடைய பழைய நாள் நினைவுகளை புரட்டிப் பார்க்க வைத்தது, முக்கியமா பாடசாலை அதிபரை மேடை ஏற்றி அவரை கேட்காத கேள்விகள் பல கேட்டு அவரை கொஞ்சம் வேருப்பூட்டினாலும், ரொம்ப சந்தோஷப் படுத்தியதுன்னு சொல்லி வித்தியாசமான ஒரு நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கியதை இரவு என் பாடசாலை நண்பி ஒருத்தி தொலைபேசியினூடாக நினைவு படுத்தியிருந்தாள்.....)

அப்போ நான் வரட்டா!....

உங்கள் நண்பன்
அபூ.....