திங்கள், 27 ஏப்ரல், 2009

இது அவனின் கனவு....



மீண்டும் ஒரு அறிமுகப் பதிவோடு உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் கொஞ்சம் மகிழ்ச்சி.

என்னடா பதிவு எழுதலாம்னு யோசிச்சிட்டு இருக்கிற நேரம் பார்த்து வந்ததே ஒரு மின்னஞ்சல். படு சூப்பர்கோ.....

கொஞ்சம் நீங்களும் தான் பாருங்களேன்...

கட்டாயம் இந்த இணைப்ப பார்த்து enjoy பண்ணுங்க.


http://www.youtube.com/watch?v=-kz1suoALGM

நம்ம நண்பன் ஸுஹைல் இருக்காரே...... ஸுஹைல் அவருக்கு DJ ன்னா ரொம்ப விருப்பம். ஏதோ அவர்ட DJ யா பார்த்த ஒருத்தர் ஒரு அறிமுகத்தைக் கொடுத்துட்டாங்க இந்த ஆல்பம்ல. இருந்தாலும் ரொம்ப நல்லா தான் கலக்கிற மச்சி. ..... வாழ்த்துக்கள்.

மீண்டும் ஒரு பதிவு விரைவில்.

அது வரையில்
அபூ..........




புதன், 22 ஏப்ரல், 2009

நேற்றைய நிகழ்வின் இன்றைய பதிவு..


(கட்டளை : கொஞ்சசுவாரஷ்யமான பதிவாக அமையலாம்.)


நேற்று என்னோட காதலி தன்னோட பிறந்த நாளை கொண்டாடியதா சொல்லி இருந்தேன் இல்லையா? சரி. எப்படி கொண்டாடி இருப்பாங்க? யாரெல்லாம் வந்திருப்பாங்க? என்று நான் யோசிச்சிட்டு இருக்கிற நேரம் நண்பன் அப்பாஸ் அனுப்பிய மின்னஞ்சல் எதோ மனதிற்கு திருப்தியாய் இருந்தது. அந்த திருப்தியை இன்றைய பதிவில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

முதல் வருடம் முடிந்து இரண்டாவது வருடத்தில் கால் பதிவது என்பது இலகுவான விசயமா? அதுவும் நிறைய தடைகள் தாண்டிய பாதையல்லவா?

எனவே அந்த நிகழ்வின் நிழல்கள் இன்றைய பதிவில் உங்களுக்காக......


இறைவன் ஆசியோடும் மத குருமார்களின் வாழ்த்துக்களோடும் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. (இரண்டாவது வருடத்தின் முதல் நாள் )


வருகை தந்த பிரமுகர்கள் மங்கள விளக்கேற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைக்கின்றனர்.

சம்பிரதாயங்களுக்கு ஏற்ப சில சமய நிகழ்வுகள் நடை பெறுகின்றது. ( இந்த புகைப் படத்த கொஞ்சம் உற்றுப் பாருங்க. அதில் சிவப்பு குர்தா அணிந்து இருக்கிறது யாரு தெரியுமா? யாருடையும் சொல்லிராதீங்க. அவருதான் நம்ம முகாமையாளர் ஜீவகுமார். )

வருகை தந்த சில பிரமுகர்கள் தான் உட்கார்ந்து கொன்டிருக்கிறாங்க. இதுல தான் வசந்ததினுடைய ஆணி வேறும் .... புரவலர் உமர் ஹாஷிமும் உட்கார்ந்துட்டு இருக்கிறார். அதோ... நீல சேர்ட் அணிந்து.

(சரி , இப்படியெல்லாம் நடந்த நேரம் கலையகத்தில் எப்படியெல்லாம் கலாட்டா பண்ணியிருப்பாங்க நம்ம அட்டகாச நண்பர்கள். கொஞ்சம் பாருங்களேன்......)



இப்படியெல்லாம் அங்கே நிகழ்வுகள் நடை பெறுகிற நேரம் நானும் இங்க இருந்து (வெளி நாட்டிலிருந்து) அங்க போகலாம்னு முயற்சி பண்ணி ரொம்ப கலக்கலா வெளிக்கட்டு வந்தேன்னா.............. ஏன் அந்த கொடுமையக் கேட்கிறீங்க?

வந்தேன்னா..........


வந்தேன்னா.........


சரி... மேலும் உங்கள் யோசிக்க வைக்கல்ல. மாட்டருக்கு வரேன். நான் வர ரொம்ப லேட்னு சொல்லி flight பரந்துட்டுது. என்ன பண்ண? தலை விதி அவ்வளவு தான்னு சொல்லி அப்படியே பதிவு எழுத உட்கார்ந்துட்டேன்.

(இது எல்லாத்தையும் விட மிகப் பெரிய கொடும என்ன தெரியுமா ? எனக்கு இலங்கை போக டிக்கெட் கிடைக்காதது தான். )

உங்க பின்னூட்ட எதிர் பார்க்கும் இவன்,

உங்கள் இல்லத்து வானொலியின் உள்ளத்து நண்பன்

சப்ராஸ் அபூ பக்கர்.

மற்றுமொரு பதிவில் சந்திப்போம். அது வரையில் நல்லதய்யே சிந்திப்போம்.......

வரட்டா!!!!!!!!!








திங்கள், 20 ஏப்ரல், 2009

என்னோட காதலிக்கு இன்னக்கி வயது ஒன்று




(தலைப்ப பார்த்து நிறைய யோசிச்சீங்களா ? பரவா இல்ல...... யாரு? நீங்க தானே.. நல்லா யோசிங்க என்றெல்லாம் சொல்ல நான் விரும்பல்ல. மேட்டருக்கு வரேன்.)
கிழக்கில் வானலைப் புரட்சி படைத்த "ஒலிக்கும் வானொலிகளில் ஜொலிக்கும் வானொலி " வசந்தம் வானொலி இன்னக்கி 21 தன்னோட முதலாவது பிறந்த தினத்த வெகு விமர்சையாக சுயாதீன தொலைக் காட்சி வளாகத்தில் அமைந்துள்ள தனது கலையகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறது.


இனிய வாழ்த்துக்கள் வசந்தமே.....

தத்தெடுத்து தரணியிலே தந்த புரவலர் உமர் ஹாஷிம் தான் இதன் ஆணி வேர்.

ஒரு வருடத்தில் கடந்த பாதைகளும், பெற்ற அனுபவங்களும் ஏராளம். அதை எல்லாம் இன்னொரு பதிவில் பதிவிடுவேன்.

இனி வசந்த வளர்ச்சிக்கு துணை நின்ற அந்த உறவுகளை நினவு படுத்துகிறேன்.

புரவலர் உமர் ஹாஷிம்

இவர் தான் இதனுடைய ஆணி வேர். உலகறிந்த ஒரு புரவலர். என்னை விட நீங்கள் நிறைய்யவே இவரைப் பற்றி அறிந்திருப்பீர்கள்.

ஜீவகுமார் (முகாமையாளர் )

சக அறிவிப்பாளர்களோடு தோளோடு தோல் நின்று நண்பனாய் பழகும் இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன ஆரம்ப கால அறிவிப்பாளர். அறிவிப்புத் துறையில் நிறைய தத்துவங்களை அறிந்தவர். பாடல் தெரிவு செய்வதில் குறிப்பாக நடிகர் திலகத்தினுடய்ய பாடல் தெரிவு செய்வதில் வல்லவன். இப்பொழுது அடிக்கடி பிரதான செய்திகளில் குரல் கொடுக்கிறார்.

சித்தீக் ஹனீபா (உதவி முகாமையாளர் )
கலையகம் வரும் போதே புன்னகை பூத்த முகத்தோடு வரும் இவரும் ஆரம்ப கால இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன அறிவிப்பாளர். தற்போது சுயாதீனத் தொலைக் காட்ச்சியிலும் , வசந்தத்தினுடைய உதவி முகாமையாளராகவும் கடமை புரிகிறார். இவருடைய குரலையும் அடிக்கடி பிரதான செய்திகளில் நீங்கள் கேட்கலாம்.

(இனி வாங்க நம்ம அட்டகாச நண்பர்கள பற்றி சொல்லறேன். "நான் சொல்வெதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை.")

அப்பாஸ் (அபா....)



பெயரிலேயே ஒரு கலக்கல். இவரிடம் முன் ஜாக்ரதை கட்டாயம் தேவை. ஏன்னு யோசிக்காதீங்க. இவர் ஒரு செய்தியாளரும் கூட. செய்தி கிடைக்கலன்னா எங்களப் பற்றி எல்லாம் ஏடா குடமா போட்டுக் கொடுத்துருவார். ஒரு சின்னப் புன்னகையில் நேயர்களைப் பூரிக்கச் செய்யும் அவரு.............. இவரு......... இப்போ FUNBOX நிகழ்ச்சி பண்ணிட்டு இருக்காரு. இருந்தாலும் செய்தி தேடுவத விடல்ல. (அத விட்டா அம்மாடியப் புடிக்கிறது கஷ்டம்னு சொல்லி என்கிட்டே அடிக்கடி சொல்லுவாரு. அம்மாடி யாருன்னு எல்லாம் நீங்க கேட்கிறீங்களா ? ஹீ....ஹீ...... சொல்ல மாட்டேனே.....)

பஸ்லி


அப்பா..... (அய்யோ.... இவர் அப்பா இல்லீங்க. ஒரு பேரு மூச்சு விட்டேன்.) சனி, ஞாயிறு மட்டும் கலையகம் வந்து போனாலும் கலையகத்தெய் கலை கட்டி விடச் செய்வார். ( மாற்ற நாளெல்லாம் எங்க போறார்னு கேட்காதீங்க? ஏன்னா இவர் ஒரு ஆசிரியரும் கூட.....) ரொம்ப நல்லா கதை பேசுவார் எங்க கிட்ட. (என்ன கதையா? ஷ்......ஷ்..............அத எல்லாம் இப்போ சொல்ல முடியாது. அப்புறமா.....)

ஸுஹைல் (6.2")


எல்லோரும் சொல்றாங்களேன்னு நானும் இவர 6.2 ன்னு சொல்லுவேன். ஆனா உயரம் ரொம்ப கம்மி தான். என்ன தான் இருந்தாலும் சொல்லிட்டு போவம் இல்லையா? ஆனா ஒரு முக்கியமான விஷயம். யாராவது டஜ் பண்றதா பார்த்தால் கட்டாயம் இவரைத் தான் நினைவு வரும். ஏன்னா நிகழ்ச்சி நேரத்துல துள்ளிசைப் பாடல்கள போட்டுன்னு ஆட்டம் போட்றதே இவரோட வேல. படத்தில் பாருங்க எப்படி இருக்காரென்று . ஒரு ந்சின்ன பய்யன். இருந்தாலும் என்னை விட 2 வயது முதுமை இவருக்கு. (பெண்கள் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவர் இவர் தானாம்கோ.....)

அஸ்கர்


ஆரம்ப காலத்தில் என்னோடு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் என்கூட குரல் கொடுத்த இவர் நான் வசந்தத்தில் நுழையும் போது அங்கே அறிவிப்பாளரை இவரிக் கண்டதும் சந்தோசம் கொண்டேன். ஒரு நல்ல அறிவிப்பாளர். நிறைய்யவே சொந்தங்கள் சேர்த்திருக்கிறார். (என்ன சொந்தமா? அதான் நேயர்களைத் தான் சொன்னேன். )

ரைஸ்


எனக்கும் இவருக்கும் உள்ள ஒற்றுமை இருவரும் ஒரே நாளில் நியமனம் பெற்றது தான். நான் அறிந்த வரையில் நிதானம் மிக்க ஒரு நண்பன்.

(இந்த அட்டகாசக் குழுவோடு நானும் அட்டகாசம் பண்ணி விட்டு இன்னக்கி இங்க தனிய ஒரு கேக்க தின்னு விட்டு கொண்டாடுறேன். பிறந்தநாள. ....... நேயர்கள் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும். தொடர்ந்தும் வசந்தத்தோடு இணைந்திருங்கள்.)

மற்றுமொரு பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை விடை பெரும் உங்கள் அன்பு அறிவிப்பாளன் ...

சப்ராஸ் அபூ பக்கர்.

(என்னை வளர்த்த என் வசந்தத்திற்கு இந்த வருடம் என்னால் செய்ய முடிந்தது இவ்வளவு தான். நான் செய்தது போதுமா?