ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

தேவை தானா எனக்கு?....

(நீண்ட நாளா ஒரு ஆசை. என்ன தெரியுமா? ஒரு மொக்கை கவிதை எழுத வேண்டும் என்று.... அதனால இன்று முடிவு பண்ணி ஒரு மொக்கை கவிதை எழுதி இருக்கேன். ஆனால் ஒரு வேண்டுகோள். வந்து வாசிக்கும் எல்லோரும் இது மொக்கை கவிதை என்று சொல்லக் கூடாது. ஓரிரண்டு பேராவது கொஞ்சம் நல்லா இருந்ததுன்னு சொன்னீங்க என்றால் தான் எனக்கு கொஞ்சம் மனதுக்குத் திருப்தியா இருக்கும். லொள்.... அப்போ வாங்க வாசிப்போம்....)





விழி மூடி யோசித்தேன்!..
அங்கே சிறகு முளைத்த
சிட்டு அவள்!.....

பேரழகி என்று நான்
அவளைச் சொன்னாள்
நான் என்ன - பெண்கள்
நெஞ்சை கொள்ளை கொள்ளும்
வெள்ளை மாதவனோ?...

வெண்ணிலவு ஜன்னலில் சிரிக்க,
சுடிதார் அணிந்த சொர்க்கமாய்
வெளியே அவள் வந்தால்
என் கண்ணை பிடுங்கிக் கொள்வேனோ நான்?...

நீ முன்னாள் போனால்
நான் பின்னல் வந்து
ஏ! பெண்ணே திரும்பிப் பாரு
என்று சொல்லின்
போடா போடா புண்ணாக்கு
என்று சொல்ல வார்த்தையில்லாமல்
வாடப் போகுது உன் நெஞ்சம்!....

மே மாதத்தில் மேஜரான நீ
ஜூன், ஜூலை மாதத்தில்
ரோஜாப் பூவின் வாசத்தில்
கண்ணாடி பார்க்காமல்
என் முன்னாள் வந்து நின்றால்
ஐயோ அம்மா! என்ற அலறல்
என்னை அறியாமலே
வெளியில் வருமோ?....

நாக்கா, மூக்கா...
கேட்டுக் கேட்டே
நானொரு சிந்து என்று
சொல்லப் போகும் நீ
என்னைப் பார்த்து
போனால் வருவீரோ
என்று கேட்க எத்தனை
நிமிடங்கள் தான் செல்லும்?....

சஹானா சாரலில் நின்று
உன் தலை முடி உதிர்வதை கூட
தாங்க முடியாது தோழா
என்றால் - எந்த தேசத்தில்
நீ பிறந்தாய் என்று
வாய் பிளப்பேனோ நான்?...

அக்கம், பக்கம் யாருமில்லாத
பூலோகம் வேண்டுமென்று
என்னை நீ அழைத்துச் சென்றால்
என் மறு மொழி எல்லாம்
யார் யாரோ நான் பார்த்தேன்
யாரும் எனக்கில்லை
என்பதாய் தான் இருக்கும்!...

இதெல்லாம் தேவை தானா எனக்கு?

(இப்படி ஒரு டூயட்டா? தயவு செய்து திட்டாதீங்க. பின்னூட்டல் மட்டும் இட்டுட்டுப் போங்க....)

பிறந்த நாள் வாழ்த்து

(இன்றைய தினம் இலங்கையின் ஆரம்ப கால சூரியன் அறிவிப்பாளரும், எம் போன்ற இளைய தலை முறைக்கு ஒரு முன்மாதிரியுமான, வலையுலகிலும் அறிவிப்பாளர்களுக்கு மிகவும் பிரயோசனமான அவரது அனுபவங்களை பதிவாய் இடும் மூத்த அறிவிப்பாளர் ரமணன் அண்ணா பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார். அவருக்கு இதயம் திறந்து இன்ப வாழ்த்துக்களை வலையுலக நண்பர்கள் சார்பாகத் தெரிவித்துக் கொள்வோம். தமிழ் பற்றும், கனீரென்ற குரல் வளமும் மிக்க அவர் நிச்சயம் ஒரு நல்ல அறிவிப்பாளருக்கான சின்னம். அண்ணா.... வாழ்த்துக்கள்.... )

அப்போ நான் வரட்டா!....

உங்கள் நண்பன்

அபூ.....

புதன், 26 ஆகஸ்ட், 2009

நினைவுகள்!....



(காதலில் காயம் கண்ட ஒரு கன்னி பெண்ணினது பாழாய் போன நினைவுகள் என் கற்பனையில்.... )

காதலில் தோல்வி இல்லை
காதலிக்க ஆளும் இல்லை!...
காத்திருந்தேன்....
காதல் தேடும் ஒரு காளைக்காய்!....

காலங்கள் செல்ல - என்
கானகத்திலும் காற்றோட்டம்
காவு கொண்டது
காதல் எனும் பெயரால்!....

கார்த்திகை மாதம்,
காலைப் பொழுது,
காதல் தூது - அந்தோ...
காகிதத்தில்!.....

காதலியே!....
கால் கடுக்க காத்திருந்து
காவியம் படைக்க - உன்னை
கரம் பற்றப் போகிறேன்!...
கன்னியே!...
கவிதையாய் பதில் வந்தாலும் சரி,
கண்ணீராய் பதில் வந்தாலும் சரி,
சம்மதம் என்கிற
ஒரு சொல் மட்டும் எனக்கு
சமர்ப்பணமாய் இருக்க வேண்டும்!...
காதலன் வரிகள் அது!....

வெறுமையாய் வெறிச்சோடிய
என் உள்ளம் வெற்றியான பதில்
கொடுத்தது - காதலில்
வெளிச்சம் கிடைக்கும்
எனும் நம்பிக்கையில்!....

காதல் மலர்ந்ததேன்னவோ
சில நாட்கள் தான்!...
கன்னி இவளுக்கோ
ஓராயிரம் வருடங்கள்
காதல் பிறந்தது போல
உள் மனதில் இனம் புரியாத சந்தோசம்!....

ஒன்றுக்குள் ஒன்றான காதல்,
ஒற்றுமையான இரு உள்ளம்,
ஊரே போற்றி நின்றது...
காலம் மாற்றி வைத்தது!....

காதலர் நம் விதியோ?...
கால தேவதன் சதியோ?...
காரமற்றுப் போனது
காத்திரமான காதல் உள்ளம் இரண்டு!....

காதல் என்ற பெயரால்
காயப் பட்டு காலம்
கழிக்கிறேன்!.....
சொந்தமென்று சொல்லிக் கொள்ள
இப்போதெல்லாம் உள்ளதேன்னவோ
பாழாய்ப் போன அந்த
காதல் நினைவுகள் தான்!.....

அப்போ நான் வரட்டா!...

உங்கள் நண்பன்

அபூ......

திங்கள், 24 ஆகஸ்ட், 2009

காத்திருப்பு



காற்று மரணித்த பொழுதுகளில்
மறவாமல் வழி மேல்
விழி வைத்தேன்!....

மெளனமான வீணையின்
மொழி அறியாமல்
ராகம் இசைத்தேன்!....

பாலைவனத்து
கள்ளி இலையை
கிள்ளி எடுத்து
வாசனை நுகர்ந்தேன்!.....

நீ நடக்கும் தெருவோர
மருங்குகளில் ரோஜா இதழ் கொண்டு
கம்பளம் விரித்தேன்!....

குயிலின் குரலை விட
இனிதாய் என் குரலை
விழுமியப் படுத்தினேன்!...

உன் பாதச் சுவடுகள் வரைய
அந்த "லியானோ " வின்
முகவரி தேடினேன்!....

என் கவிதை வரிகளை
விஞ்சி நின்ற வைர முத்து
வரிகளைத் தான்
நீ ரசிக்கிறாய் என்றால்
அதற்காகவே வைரமுத்துவின்
பக்கங்களைப் புரட்டினேன்!.....

அமர்தலில் கூட உனக்கு
தனி சுகம் இருப்பதால்
எனக்கும், உனக்குமாய்
தனித் தனி இருக்கைகளை
தயார் செய்தேன்!..

இத்தனையும் ஆன பின்னால்
இதழோரப் புன்னகையை
இரவல் எடுத்துக் கொண்டு
எங்கே நீ சென்றாய்?

வேண்டாம் பெண்ணே!.....
காதலில் காயப் பட்ட
ஆண் மனது உன்னை
ஆண்டுகள் சென்றாலும்
ஆட்டிப் படைக்கும்!....

ஆதலால் கண்ணே!....
ஆசையோடு எதிர் பார்க்கும்
ஆண்மையை நாடி
அன்போடு வந்து விடு!...
ஆவலோடு காத்திருக்கிறேன்!...

எதிர் பார்ப்புக்களுடன்....

உங்கள் நண்பன்

அபூ.......

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

விருந்தாகும் விருதுகள்



தொடர்ந்தும் அடிக்கடி சந்தோஷங்களை சந்திப்பதில் எனக்கு மட்டில்லாத மகிழ்ச்சி. ஏனெனில் பதிவு உலகுக்கு வந்து சிறிது காலத்தில் 3 வது விருது பெற்றிருக்கிறேன். எல்லோரும் வாங்கும் விருது தானே என்று நான் இதை கருத மாட்டேன். ஏனெனில் எனது எழுத்துத் துறை அனுபவத்தில் ஏதோ சின்னதாய் ஒரு வளர்ச்சி இருப்பதாகவே கருதுகிறேன். அதனால் அவர்கள் விருந்தாய் அளிக்கும் அந்த விருதுகளை மிகவும் சந்தோஷமாய் நான் ஏற்றுக் கொள்கிறேன்....

அந்த வகையில் நண்பர் குறை ஒன்றும் இல்லை எனக்கு ஒரு விருது வழங்கியுள்ளார். ரொம்ப நன்றி நண்பரே. எனவே அந்த விருதை நான் ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது. அதை இன்னும் 10 பேருக்கு வழங்க வேண்டும். அந்த இடத்தில் தான் கொஞ்சம் தள்ளாடுகிறேன். ஏனெனில் பதிவுலகத்தில் இருக்கும் அத்தனை பேரினது ஆக்கங்களும் ஏதோ ஒரு வகையில் உள்ளத்தை தொடுகிறது. எனவே பெரும் சங்கடத்துக்கு மத்தியில் நானும் 10 பேரைத் தெரிவு செய்து இந்த விருதினை அளிக்கிறேன். அன்போடு ஏற்றுக் கொள்ளுங்கள்.

நன்றி நண்பா குறை ஒன்றும் இல்லை...



1. லோஷன்

2. யோ வாய்ஸ்

3. ரமணன்

4. மனவிலாசம் (S. A. நவாசுதீன் )

5. நிலாமதி

6. ஹிஷாம் முஹம்மத்

7. ஹேமா

8. சுமஜ்லா

9. மனவிழி (சத்ரியன்)

10. என் இனிய இல்லம்

நான் அடிக்கடி சென்று வரும் வலைப் பதிவாளர்களுக்குத் தான் இன்றைய விருதினை வழங்கியிருக்கிறேன். அனவே அவர்கள் சந்தோஷத்தோடு அதனை ஏற்றுக் கொண்டு இன்னும் 10 பேருக்கு அதனை வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

அப்போ நான் வரட்டா.....

உங்கள் நண்பன்

அபூ.....

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

வா.... ரமழானே வா!......



அலைகளாய் வீசிய உணர்வுகள்
அப்படியே அடைக்கலம் பெறட்டும்
அமைதியான அந்தி பொழுதில்
அழகான தலைப் பிறை பார்த்து!.....

ஏழையின் பசியை
ஏறெடுத்துப் பார்க்காதவர்கள்
ஏக்கத்தோடு உணர
ஏகனால் பரிசளிக்கப் பட்ட நோன்பே வா!....

பதினொரு மாதங்கள்
பருத்தியாய் பறந்தனர்
பகுத்தறிவு இருந்தும், இல்லாதவர்களாய்...
பதில் சொல்ல வரும் ரமழானே நீ வா!.....

இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து
இனிய நோன்பு அதில் நான்கு
இன்சுவை பெற வேண்டும் நாம் நோற்று
இருள் நோக்கும் ரமழானே வா!....

ஆயிரம் மாதங்களை விடச்
சிறந்த ஓர் இரவு....
ஆசையோடு எதிர் பார்க்க வைக்கும்
ஓர் ஒற்றை நாள் இரவு.....
இனிய ரமழானே உன்னிடம்!.....
அதனால் நீ வா!......

பகல் முழுதும் நோன்பு நோற்று
இரவு முழுதும் நின்று வணங்கி,
இறைவனிடம் கெஞ்ச வேண்டும்
விஞ்சி நின்ற எம் பாவங்களை
போக்க வேண்டி!.....
வா.... ரமழானே வா!.....

தவறுக்கும், மறதிக்கும்
மத்தியில் படைக்கப் பட்ட
மனித இனம் மன்றாட வேண்டும்
மகத்தான இறைவனிடம் !......
வா...... ரமழானே வா.....

நரக வாயில்கள் பூட்டிடப்பட்டு
சுவன வாயில்கள் சுகந்தம் பெரும்
நாட்களைக் கொண்ட ரமழானே!....
நீ வா!......

செல்வந்தர்கள் சுக போகம் வாழ
செல்வச் செழிப்புக்கள்
விகிதாசார அடிப்படையில்
சென்றடைகிறது -
சொல்லொனாத் துயரடையும்
ஏழைகள் கரங்களில்
"ஸகாத்" எனும் பெயரில்!....
எனவே நீ வா ரமழானே!......

முப்பது நோன்பு
முகம் மலர்ந்து நோற்று
முறுவல் பூத்து
"முஸாபஹா" செய்யும்
ஈகைத் திருநாளைக் கொண்டு வரும்
ரமழானே நீ வா!.....

உன் வருகையை
இன் முகத்தோடு எதிர் பார்க்கிறோம்!...
வா..... ரமழானே வா......

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

அவன் ஒரு அறிவிப்பாளன்







பூப் பூக்கையில் அதற்கு
பல அர்த்தம் சொல்கிறான்....
அதை மலர்களும் உணர்கிறது,
மனிதனும் உணர்கிறான்!....
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!....

ராகம் இசைக்கும்
காலைப் பொழுதில்
ராகம் இன்றி ராகம் இசைக்கிறான்
வாய் திறந்து வெறும் வார்த்தைகளால்!...
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!...



வினோதமாய் வியூகிக்க
சில விடயங்களை விரித்து வைக்கிறான்!..
கிடைக்கும் சில விடயங்களை
சிறப்பாய் விமர்சனம் செய்கிறான்!....
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!....

பகற் பொழுதில்
பட்டினியால் வாடுவோர் கூட
உள் உணர்வுகளால் வாடக் கூடாது
என்பதற்காக பகற் பந்தி வைக்கிறான்!..
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!....



தேடல் என்பதை தேடித் தேடியே
கற்றதையும், அறிந்ததையும்
செவிப் புலன் வரை கொண்டு சேர்கிறான்!
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!....

எங்கேயும், எப்போதும்
என்றென்றுமே வேண்டும்
புன்னகை என்பதற்காய்
புன்னகையையும், சந்தோசத்தையும்
தனிமையிலே கொடுக்கிறான்!...
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!...

நேற்றைய காற்றில்
இன்றைய நினைவுகள்
சிறகு விரித்து நிலாச்சோறு
உண்ண ஆசைப் பட்டால்????....
ஊட்டி விடுகிறானே அவன்!...
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!....



விடிய விடிய விழித்திருந்தாலும்
விருட்சம் கொடுத்து
விடியும் வரை விழியோடு
கதை பேசி....
விடியலுக்கு வெற்றி கொடுக்கிறான்!...
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!....

உருவாகும் கற்பனைகளுக்கு
அவனது உமிழ்நீரும் உரமாகும்!...
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!....

கனவோடு வாழ்ந்தவன்
கதை பேசுகிறான்
கவிதையும் பாடுகிறான்!..
அத்தனையும் மற்றவர்கள்
சந்தோசத்துக்காக வேண்டி!....
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!....

அப்போ நான் வரட்டா!....

உங்கள் நண்பன்

அபூ....

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

தனிமை எனும் விதி....




தனிமை தான் வாழ்க்கையின்
அர்த்தங்களை உணர்த்திச் செல்கின்றன!...

உன்னைப் போல் தான் நானும்
உற்றம் இழந்து இன்று
தனிமைப் பட்டிருக்கிறேன்!....

என்றோ ஓர் நாள்
நானும் ஒரு ரோஜாவாய்
கண்ணில் தென் பட்டால்
தலையில் ஏறி உட்கார்ந்திருப்பேன்!...
மறுகனம் வாடிவிட்டால்
பலர் கால்களால்
பதம் பார்க்கப் படுவேன்!....

இது தான் உற்றம் இழந்து
தனிமைப் பட்டிருக்கும்
உனதும், எனதும் விதி!.......

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

ஆறாத வடுக்கள்


நிசப்த இரவுகளில்
ஏன் நான் மட்டும் அழ வேண்டும்?.
எல்லோரையும் போல் தானே
எனக்கும் எல்லாம் இருக்கிறது!..
பிறகு ஏன் ஒதுக்கி வைத்தார்கள்?....

குடும்பம் குதூகலம் இல்லாமல்
ஒதுக்கி வைத்தது சில காலம்!.....
நண்பர்கள் நட்பு வேண்டாமென
தள்ளி வைத்ததும் சில காலம்!.....
அப்போதெல்லாம் நான் யோசிக்கவில்லை.!
ஏன் இவர்கள் இப்படி
தள்ளி வைக்கிறார்கள் என்று?...

வேண்டாமென அவர்கள் கெஞ்சியும்
வேண்டுமென அடம் பிடித்தேன்
அன்புக்கு இலக்கணம் அறிந்து
அடைக்கலம் பெறுவதற்கு!....

அன்பை விலை கொடுத்தாவது
வாங்க முடியுமா?...
தினம் தினம் காணும்
இதயங்களிடமெல்லாம்
விலை பேசினேன்!....
காட்சிப் படுத்தப் பட்ட
பொருட்களுக்கு நிரம்பல் இல்லை
என்பதை அறியாமல்!.....

"ஏழையாய் வாழ்ந்தாலும்
கோழையாய் வாழாதே"
எங்கோ கேட்ட ஞாபகம்
பிறகு ஏன் கோழையாகி
அன்பை விலை பேச வேண்டும்?....

அழகு, அறிவு, அந்தஸ்து
இதைப் பார்த்துத் தானா அன்பு வரும்?
மன்னிக்க வேண்டும்.....
அழகு என்பது என் அகமதைத் தவிர
புறமெங்கும் இல்லை.....
அறிவு ஏதோ இறைவன் புண்ணியம்....
அந்தஸ்து என்பது அடுத்த வீட்டுக் காரன்
அடுக்கு மாடி கூட
வர்த்தக மையம் தான்!,,,,

மூங்கிலில்லா காட்டில்
முருங்கையைக் கொண்டா
புல்லாங்குழல் செய்வது?
முடியாத காரியம்
என்பதால் தானே
வாழ்க்கைக்கு புதிய
முகவரி கொடுக்க
கடல் கடந்தேன்!.....

நேசக் காற்று இல்லாததினால்
இப்போதெல்லாம் சோகக் காற்று தான்
வெற்றிடமான இதயத்தில்
இளைப்பாற வருகிறது!....

என்ன செய்ய?....
வாயால் வாதாடித் தான்
அன்பைப் பெற வேண்டும்
என்கிற அகராதியிலிருந்து
மாற்றப் பட்டு விட்டேன்!....

இருந்தாலும் மனதின்
ஆறாத வடுக்களுக்கு
யார் பதில் சொல்வது?....

(என் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்கள் தான் கவிதையாய் உறுப் பெற்றிருக்கிறது. மன்னித்துக் கொள்ளுங்கள்....)

உங்கள் நண்பன்

அபூ.....

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

கண்டு பிடிச்சிட்டாங்கய்யா....

நாளுக்கு நாள் பெருகிவரும் கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டை அடுத்து அதை தயாரித்து தரும் நிறுவனங்களுக்கிடையில் பலத்த போட்டி நிலவுகிறது.

இதனால் தாங்கள் தயாரிக்கும் தொலைபேசிகளில் புதிய புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி பயனாளர்களை கவர வேண்டிய கட்டாயத்துக்கு தயாரிப்பு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. இப்படி புதிய புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் தென்கொரிய நிறுவனங்கள் தான் முதலிடத்தில் இருக்கின்றன.

அந்த வகையில் அண்மையில் தென்கொரிய நாட்டை சார்ந்த Samsung நிறுவனம் தண்ணீரிலிருந்து பாதுகாக்கும் வகையில் ஒரு Mobile Phone ஐ சந்தைக்கு அறிமுகப்படுத்தியது.

அதே போல் சூரிய ஒளியில் charge செய்யும் தொழில்நுட்பத்தை புகுத்தி ஒரு தொலைபேசியையும் அறிமுகப்படுத்தியது.அதே போல் இப்போது இருக்கும் TFT-LCD திரையின் அடுத்த கட்டமாக உள்ள AMOLED என்ற தொழில்நுட்பத்தை புகுத்தி Samsung Jet என்ற போனை சந்தைக்கு அறிமுகப்படுத்தியது.

இப்போது தென்கொரிய நாட்டை சேர்ந்த மற்றொரு நிறுவனமான LG நிறுவனம் மொபைல் திரையில் மிக உயர் ரக தொழில்நுட்பமாக முதல் முறையாக HD (HighDefinition) தொழில்நுட்பத்தை புகுத்தி "Chocolate BL40" என்ற பெயரில் ஒரு போனை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.



கிட்டதட்ட LCD டிவிக்களில் பயன்படுத்தப்படும் இந்த HD தொழில்நுட்பம் முதமுறையாக மொபைல் போனில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் நாம் நமது மொபைல் போனில் LCD டிவியில் காட்சிகளை பார்ப்பது போன்ற ஒரு புதிய அனுபவத்தை பெறலாம்.

இன்னும் இந்திய சந்தையில் வராத இந்த போனின் விலை 38000/- என்ற குறியீட்டு விலைக்கு விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(இனி என்ன?... வளரும் தொழிநுட்பத்திற்கேட்ப நாமும் மாறிக் கொள்ள வேண்டியது தான். இருந்தாலும் விலை ரொம்ப ஓவராத் தான் இருக்குது இல்லையா?...)

(இன்றைய என் தேடலில் சிக்கிய ஒரு தொழிநுட்ப பதிவு இது......)

அப்போ நான் வரட்டா

உங்கள் நண்பன்....

அபூ.....

சனி, 8 ஆகஸ்ட், 2009

பொய் + அருமை

பொய்



பொய் என்ற சொல்லையே பொய்யாக்கி
பொய்யை பொய்யெனச் சொல்லும்
பொய்யர்கள் இருக்கும் வரை
பொய் பொய் தான்!.......
**************************************


அருமை



அருமையான குணத்தை
அருமையில்லாதவன் கண்டு
அருமை எனச் சொன்னால்
அருமை எனும் சொல்லின் அருமை
அருமை இல்லாதவன் சொல்லில் தெரியும்!.....

உங்கள் நண்பன்

அபூ.....

வியாழன், 6 ஆகஸ்ட், 2009

காதல் மழை....


முகில்கள் சிந்தும்
கண்ணீரில் நான்
நனைகிறேன்!.....

நான் சிந்தும்
கண்ணீரில்
அவள் நனைகிறாள்.....

இது தான் காதல் மழையா?....

உங்கள் நண்பன்

அபூ.......

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

திருவிளையாடல் ஆரம்பம்....




ரொம்ப சந்தோஷத்தோடு இன்றைய பதிவை எழுத ஆரம்பிக்கிறேன். ஏனெனில் எழுத்துத் துறையில் நான் கால் எட்டி வைக்கும் முதல் ஏணிப் படி இது. சிறு வயதிலிருந்தே வாசிப்பு, பேச்சு, கவிதை, விவாதம், அறிவிப்பு, பாஓதல் என எல்லா நிகழ்ச்சிகளிலும் ஆர்வத்தோடு கலந்து கொள்ளும் நான் வலையுலகிற்கு கொஞ்சம் புதியவன். ஆரம்பத்தில் எழுத்துப் பிழைகளோடு தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்த போது பின்னூட்டல் மூலம் கரம் கொடுத்து கரை சேர்த்தீர்கள். அதன் பலன் தான் இன்று என்னை அரைச் சதம் அடிக்க வைத்திருக்கிறது. ரொம்ப நன்றி அன்புள்ளங்களே.

ஒரு கலைஞன் வளர்கிறான் என்றால் ஆயிரம் சிறைச் சாலைகள் மூடப் படுவதற்கு ஒப்பாகும் என என் ஆசிரியர் அடிக்கடி என்னைப் பார்த்து சொல்லுவார். உண்மையில் சிலருக்கு திறமை இருக்கும். ஆனால் எழுத வராது. ஆனால் சிலருக்கு எழுத முடியும். அதை கற்பனை பண்ணி எழுத முடியாமல் தவிப்பார்கள். (இது நான் நிறைய பேரில் கண்ட உண்மை.) இப்படி போராடுபவர்களுக்கு மத்தியில் நான் கடுகு மணி அளவு பெறுமதியில் வலையுலகில் அரைச் சதம் அடிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. இந்த அளவுக்கு சிறிய திறமையை தந்த அந்த இறைவனுக்கு என்றும் நன்றியுடையவன் நான். மற்றப் படி என் நன்றிகளுக்கு உரித்தானவர்கள் தினம் தினம் என் வலைப் பூ வந்து நட்பைப் பரிமாறும் நட்புள்ளங்கள் நீங்கள் தான்.

இன்றைய தினம் நான் ஒரு உண்மையை கட்டாயம் உங்களிடம் சொல்லியே ஆக வேண்டும். நான் இப்போது கடல் கடந்து வெளிநாட்டில் Graphic Designer ஆக பணி புரிந்து கொண்டிருக்கிறேன் ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில். வலைப் பூ ஆரம்பித்த காலத்தில் எல்லா வலைப் பூவையும் நான் பார்ப்பதுண்டு. குறிப்பாக அவர்களுடைய எழுத்தாற்றலை. ஆரம்பத்தில் பின்னூட்டல் இடுவதற்கு தயங்கினாலும், பிற்காலத்தில் பின்னூட்டங்களும் இட்டு வந்தேன். ஆனால் இப்போது சிறிது காலத்திற்கு நான் பின்னூட்டல் இட வேண்டுமானால் சிறிது போராட வேண்டி இருக்கிறது. காரணம் நான் இருக்கும் நாட்டில் இப்போது பாடசாலை விடுமுறை கொடுக்கப் பட்டிருக்கிறது. எனவே உயர் பதவிகள் வகிக்கும் சிலர் தன் குடும்பத்தோடு தாய் நாட்டுக்கு சென்று விட்டனர். அதனால் எனக்கு அவர்களில் ஒருவருடைய இடத்தை நிரப்ப வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே பாடசாலைக் காலங்களில் 1+1 கட்டாயம் 11 தான் வர வேண்டும் என அடம் பிடித்தவனை இப்போது கணக்கியல் வாட்டி வதைக்கிறது. இருந்தாலும் தன் நம்பிக்கையோடு எந்நாளும் முடியும் என தைரியம் எடுத்துக் கொண்டு அந்தப் பொறுப்பை செய்து வருகிறேன். எனவே அதில் பிழைகள் ஏற்படக் கூடாது என்பதற்காகத் தான் இப்போது கொஞ்சம் வலைப் பூ மேய்வதைக் குறைத்துள்ளேன். ஆனால் சின்ன ஒரு இடை வேலை கிடைத்தால் போதும். அப்படியே சுற்றி அடித்து வந்து கொண்டே இருப்பேன். ஆனால் இன்னும் கொஞ்சம் இடை வேலைக்குப் பிறகு மீண்டும் ஆரம்பிப்பேன் என் மேய்தலை. அதுவரையில் நான் கட்டாயம் உங்கள் வலைப்பூ வருகிறேன். முடியுமான சந்தர்ப்பத்தில் பின்னூட்டலும் இடுகிறேன்.


இனி வலைப் பூவில் என்னை தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்கள். விருதும் கொடுத்திருந்தார்கள். அத்தனை பேருக்கும் கோடான கோடி நன்றிகள். நீங்கள் அத்தனை பேரும் நல்ல நண்பர்களாக என்னில் இடம் பிடித்து விட்டீர்கள். மீண்டும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

நானும் இன்று ஒரு விருதினை என் தளத்திற்கு வந்த உங்களுக்காக வழங்கி வைக்கிறேன். இது உங்கள் அனைவருக்கும் சமர்ப்பணம். சந்தோஷமாய் ஏற்றுக் கொள்ளுங்கள்.




இனி என்ன அரைச் சதம் அடிச்சாச்சு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் திருவிளையாடலை ஆரம்பிப்பது தான் என் வேலை. நிச்சயம் கரம் கொடுத்து நிற்பீர்கள் எனும் நம்பிக்கையில் என்னுடைய ஐம்பதாவது பதிவை முடித்துக் கொள்கிறேன்.

நான் இந்த அளவு தூரத்துக்கு வெற்றி நடை போட்டு வருவதற்கு காரணமாய் இருந்த அந்த இறைவனுக்கும், அன்புள்ளங்கள் உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் உரித்தாகட்டும்.

அப்போ நான் வரட்டா.....

உங்கள் நண்பன்

அபூ.......

(மீண்டும் சந்திப்போமா?.....)