செவ்வாய், 8 செப்டம்பர், 2009

மன்னிக்க வேண்டுகிறேன்!...

அன்புள்ளங்களே!....

புனித ரமலான் மாதம் என்பதால் அதிகமாக வலைப் பக்கம் வந்து போவதில்லை. அதனால் எந்த வலைத் தளத்திற்கு செல்வதற்கான வாய்ப்பும் கிட்டவில்லை. அலுவலகத்தில் கூட 3 மணித்தியால வேலை என்பதால் அலுவலக வேலையை மாத்திரமே பண்ணிக் கொண்டிருக்கிறேன். மிகுதி நேரத்தில் தொழுகை, குரான், நல்லமல்கள் என இயலுமான அளவு புனித ரமலானின் பயனை அடைந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் உன்னதமான உம்ராக் கடமையை நிறைவு செய்து விட்டு வந்தேன். இன்ஷா அல்லாஹ் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றவும் எண்ணம் வைத்துள்ளேன். உங்களது பிரார்த்தனையில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

புனித ரமலானின் இரண்டாவது பத்தான மஹ்பிரத்துடய பத்தில் இருக்கிறோம். அதிகமாக பிழை பொறுக்கத் தேடுங்கள். கடைசிப் பத்தின் ஒற்றை இரவுகளில் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த அந்த லைலதுல் கத்ர் இரவை எதிர் பாருங்கள். முடியுமான வரை இரவு முழுதும் நின்று வணங்குங்கள். ஸகாத், ஸதகா என முடியுமான வரை உதவி பண்ணுங்கள். நிச்சயம் அவைகள் எல்லாம் நிலையான தர்மங்களில் சேரும்.

இன்ஷா அல்லாஹ் ரமலான் முடிந்ததும் மீண்டும் பதிவுகளோடு உங்களை சந்திக்கிறேன். மீண்டும் சந்திப்போம்... அதுவரையில் நல்லதையே சிந்திப்போம்....

உயர்ந்த இறைவன் நம் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக!......

இன்றைய தினம் பிறந்த தினத்தைக் கொண்டாடும் அன்பு நண்பன் பிரபாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.... (விழியும் செவியும் = நானும் நீயும்....)

நான் பதிவு எழுத ஆரம்பித்ததும் முதன் முதலாய் பின்னூட்டல் இட்ட மகான் இவர் தானுங்கோ....

So நீடூழி காலம் 16 ம் பெற்று வாழ்க நண்பரே......

உங்கள் நண்பன்

அபூ.....

செவ்வாய், 1 செப்டம்பர், 2009

அகர வரிசையில் ஐயாவின் அலசல்கள்...

தொடர் பதிவுக்கு அழைத்த நண்பன் சீமாங்கனிக்கு நன்றிகள்....

அட்டகாசம் பண்ணியது : வசந்தம் வானொலியின் Fun Box நிகழ்ச்சியில் ஒரு அறிவிப்பாளராய்...

ஆள் மாறாட்டம் : இரண்டு காதல் புறாக்கள் காளை இவனை காவு கொள்ளத் துடித்த வேளை ( பெண்களிடம் ஆள் மாறாட்டம் பண்றது ரொம்ப கஷ்டமான வேலைங்க...)

இன்பமான செய்தி : இப்போதைக்கு காதல் எனும் கடலில் மூழ்கி தத்தளிக்க நான் தயாரில்லை. (இது வரை மூழ்கி சேர் பூசிக்கொண்டது போதும். லொள்...)

ஈயென பல்லிளித்து : வேற எப்போ?.. அப்பப்போ அழகான பெண்களைப் பார்த்து. (இதை செய்தால் தான் கையில் கடிகாரமே இல்லாத நான் அடிக்கடி நேரம் கேட்டு அறிந்து கொள்ளலாம். இது எப்புடி?....)

உணர்வுகள் அழுதது : உயர் தரப் பரீட்சை முடிவிலும், வசந்தம் வானொலியின் கடைசி நிகழ்ச்சியிலும் (21 / 11 / 2008 )

ஊணமாய் நின்றது : பழகிய ஒவ்வொரு நண்பனினதும் பிரிவின் போது....

என்ன கற்பனை : பெரிசா எதுவுமே இல்லீங்க.... ஒரு நல்ல அறிவிப்பாளராய் மிளிர்வதைத் தவிர.....

ஏழைகள் பற்றி : வெளியில் ஏழைகளாய் வாழ்ந்தாலும், கோழயாய் வாழ விரும்பாதவர்கள். நல்ல குணாதிசயம் கொண்டவர்கள். (என் பார்வையில்...)

ஐக்கியம் : அது நிச்சயம் என்னை விட நம் நாட்டுக்கு அவசியம்

ஒதுங்கி நின்றது : நண்பனின் காதலியின் குடைக்குள்..... (வேற எதுக்குமில்ல... நண்பனின் அனுமதியோடு மழைக்காக.... அதுவும் நண்பனோடு சேர்ந்து.... )

ஓலையின் கீற்றுக்கள் : பம்பரத்துக்கும், ஊதிக்கும் உயிரை விட்டது... என் கவிதைக்கு துணை நின்றது...

ஒளடதம் : (கொய்யாங்கோ !... கொய்யாங்கோ!.... Moxal Plus - இது அது இல்லீங்கோ!...)

கஃபா : இரண்டு மாதங்களுக்கு முன் தான் தரிசனம்....
(மன்னிக்கவும்... கடைசி ஃ எழுத்தை என்னால் Keyboard ல் தேட முடியவில்லை. தயவு செய்து தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் இடலாம். )

(வாழ்க்கையில நடக்காத, கற்பனையில உள்ள சில விசயங்களை அகர வரிசையில சொன்ன எனக்கு நீங்க என்ன சொல்லப் போறீங்க?... தாரளமா சொல்லுங்க....)

பதிவைத் தொடர நான் அழைக்கும் நல்லுங்கள்...

குறை ஒன்றும் இல்லை...


யோ வாய்ஸ்!..


ஹேமா

பிரபா

யாழினி

ஜலீலா

Mrs. Faizakader

அப்போ நான் வரட்டா!....

உங்கள் நண்பன்

அபூ....