செவ்வாய், 9 ஜூன், 2009

புகழின் உச்சத்தில் இசைப் புயல்


அதிஷ்டம் ஒரு முறை தான் வாழ்வில் கதவைத் தட்டும்னு நிறைய மூதாதையர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் அது பொய்யான செய்தியோ என்பதை ரகுமான் பெற்றுக் கொள்ளும் தொடர் வெற்றிகளைக் கண்டு சிந்திக்கத் தோன்றுகிறது. எது எப்படியோ "ஸ்லம் டாக் மிள்ளியனர் " படத்திற்கு இசை அமைத்ததற்காகவும், அதில் இடம் பெற்ற "ஜே ஹோ " பாடலுக்கு அற்புதமாக இசையமைத்து பாடியதற்காகவும் அவருக்கு ஒஸ்கார் விருது வழங்கப் பட்டது யாவரும் அறிந்த சங்கதியே.... (அப்போ..... அதைப் பற்றி ஏன் இன்னும் சொல்லிட்டு இருக்கேன்னு கேட்கிறீங்களா???? அட..... இனித் தானே சங்கதியே இருக்கு......)

இந்திய சினிமாவின் தரத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்திய ரகுமானுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தினை கடந்த ஞாயிறன்று அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகம் வழங்கி கௌரவித்தது.

நிகழ்வு முடிந்ததும் ரகுமான் கூறியதாவது .........

சர்வதேச அளவில் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கும் ஹாலிவூடில் இசை அமைக்க எனக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. "கப்புள்ஸ் ரிட்ரீட் " இது தான் திரைப் படத்தினுடைய பெயர். இந்தப் படத்தில் இசை அமைப்பதில் வேறு யாருடைய குறுக்கீடும் எனக்கு கிடையாது. ஏனெனில் எனது முழுமையான திறமையின் வெளிப்பாடாக இந்த திரைப் படம் எனக்கு அமைய இருக்கிறது. (இனி என்ன????? கலக்குங்க ......கலக்குங்க.......... பார்க்கவும், கேட்கவும் தானே போறோம்....)






அவர் இந்த திரைப் படத்தைப் பற்றி சொன்னதெல்லாம்.......

இது ஒரு காதல், காமடி கொண்ட படம். ஒரு தீவுக்கு நான்கு காதல் ஜோடிகள் சுற்றுலா செல்கிறார்கள். அங்கு நடக்கும் காதல் வெளிப்பாடுகள் காமடி கலந்து படமாக்கப் படுகிறது. இந்தப் படம் இந்த ஆண்டின் இறுதிக்குள் திரைக்கு வரும் எனத் தெரிவித்தார்.

பீட்டேர் பில்லிங்க்ச்லே இயக்கும் இந்தப் படத்தில் ரகுமானைத் தவிர வேறு இந்தியர் யாரும் பங்கு கொள்வதில்லை என்பது இன்னுமொரு முக்கியமான விஷயம்.

(ஐயா ... நீங்க எங்க போனாலும், எந்த உயரத்தை தொட்டாலும் அடிக்கடி தமிழ் உலகத்திற்குள்ளும் வந்து எங்களுடைய செவிகளுக்கும் விருந்து ஊட்டிட்டு போங்க......அப்பப்போ...... போற பாதையில..... இது நான் சொல்லலீங்க.... உங்க ரசிகர்களாகிய நாங்க சொன்னதுங்க......)

ரகுமானின் வெற்றிப் பயணத்துக்கு வாழ்த்துக்கள் பல கோடி.......

வரட்டா!...........

(வந்ததும் தான் வந்தீங்க....... மனதுல உள்ளத சொல்லிட்டு போங்க, நான் ஏற்றுக் கொள்கிறேன்....எதையும் ஏற்றுக் கொல்ற பக்குவம் என்கிட்ட இருக்குதாம்.... இது நண்பர்கள் அடிக்கடி சொல்ற வார்த்த..... )

உங்கள் நண்பன்
அபூ.......

கருத்துகள் இல்லை: