செவ்வாய், 2 ஜூன், 2009

இசையில் ஒரு கலவை.... கடந்தது 66 வது வயதை!!!


"அன்னக் கிளி" திரைப்படம் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இதுவரையில் நான்காயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்து, 750 ற்கும் மேற்பட்ட திரைப் படங்களுக்கு பின்னணி இசையமைத்து இசையில் ஞானம் கண்ட (கொண்ட ) அந்த "இசைஞானி " இன்று தன்னோட பிறந்த நாளை கொண்டாடுகின்றார்.

(இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் )

1943 ம் ஆண்டு "ராசய்யா " எனும் இயற் பெயரோடு பிறந்த இவர் இந்தியாவின் மிகச் சிறந்த இசை அமைப்பாளர்களுள் ஒருவராவார். ஹார்மோனியம், கிடார் வாசிப்பதில் கொல்லைப் பிரியம் கொண்ட இவர் 1970 களின் பின்னர் சினிமாவிற்குள் நுழைந்தார். தமிழக நாட்டுப் புற இசை, கருநாடக இசை, மற்றும் மேற்கத்தேய இசையில் பயிற்சி பெற்றிருக்கிறார். (இந்திய திரைப் படங்களில் மேற்கத்தேய இசையைப் புகுத்தியவர்களில் இவருக்கு முக்கிய பங்குண்டு)

"மச்சானப் பார்த்தீங்களா ??" பாடலின் வெற்றி அவரையும் வெற்றியின் உச்ச கட்டத்திற்கே இழுத்துச் சென்றது. அதனால் தான் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை 3 தடவை பெற்றுள்ளார்.
1985 - சாகர சங்கமம் (தெலுங்கு )
*************************************
1987 - சிந்து பைரவி (தமிழ் ) - நானொரு சிந்து...... பாடல் நினைப்பிருக்கா??
***********************************
1989 - ருத்ர வீணை ( தெலுங்கு )
***********************************
(தொடர்ந்து வரும் இரண்டு வருடங்களில் தேசிய விருது பெறுதல் என்பது உண்மையிலேயே போற்றத் தக்க ஒரு விடயம் தானே!.......)

இவரது பயணத்தை மட்டும் இசையோடு நிறுத்தி விடாமல் தனது குடும்பத்திற்கும் ஆகாரமாய் ஊட்டி விட்டுள்ளார். மகன்மார் "கார்த்திக் ராஜா , யுவன் ஷங்கர் ராஜா, மற்றும் மகள் பவதாரிணி " ஆகியோரையும் இசை உலகிற்கு அறிமுகப் படுத்தி வைத்தார். குடும்பமே இசை உலகில் மிதந்து கொண்டிருக்கும் வேலையில் இவர்கள் அனைவரினதும் படைப்பு மேலும் எங்களுக்கு இனிமையை தரும் நம்பிக்கையில், இசையமைப்பாளர் மட்டுமல்ல, இன்பமான பாடல்கள் பலதையும் தந்த அந்த ஞானிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மணிரத்னம்

"பகல் நிலவு ", "இதயக் கோயில் " என ஆரம்பமாகி இயக்கத்தில் நிலவு கண்ட அந்த மணியும் இன்றைய தினம் பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றார்.

(இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் )

1956 ல் பிறந்த இவர் 1988 ம் ஆண்டு நடிகை சுஹாசினியை திருமணம் செய்து கொண்டார்.

"மௌன ராகம் ", " அஞ்சலி " , "பாம்பே ", "ரோஜா " என வெற்றிப் படங்களைத் தந்த இவர் இப்படங்களுக்காக தேசிய விருதினையும் பெற்றுக் கொண்டார். (இன்னும் ஏராளம் இருக்குது...........)

தொடர்ந்தும் நிறைய படைப்புக்களை படைக்க வேண்டும் என இப் பிறந்த நாளில் இவரிடம் கேட்டுக் கொண்டு இவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை நாம் மீண்டும் தெரிவித்துக் கொள்வோமா?????

சந்ரு

நம் வலைப் பூ நண்பனும், வானொலி நண்பனும், "எங்கேயும் எப்போதும் " நாயகனுமான சந்ரு இன்று தன்னோட (எத்தனயாவதோ????????) பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்.

(இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் )

தாளம் FM , சூரியன் FM, வெற்றி FM என தன் அறிவிப்புப் பயணத்தைத் தொடர்ந்த இவர் வெற்றியில் இப்போது படைக்கும் நிகழ்ச்சி "எங்கேயும் எப்போதும் ". சுவாரஷ்யமான நிகழ்ச்சி.

இன்று முழுக்க முழுக்க வெற்றி வானொலியை தான் கேட்க சந்தர்ப்பம் கிடைத்தது. சந்ருக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்து கொண்டே இருந்தது. இதில் எல்லாத்தையும் விட சுவாரஷ்யமான சம்பவம் அவருடைய நேயர்கள் அவருக்கு சூட்டியிருந்த புனைப் பெயர்கள். (சந்ரு! நீங்க ரொம்ப மோ......, நிறைய பெண்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டீங்க...........)
அறிவிப்புத் துறையில் மாத்திரமல்ல, எழுத்துத் துறையிலும் ஆர்வம் உள்ள சந்ரு,........ உங்கள் பணியும், சேவையும் தொடர உங்களுக்கு வாழ்த்துக்கள்.

(உங்களுக்காக......மீசைக் கார நண்பா!... உனக்கு புகழ் அதிகம்டா....ன்னு சொல்லி ஒரு பாடல் எழுதி, அதற்கு தானே இசையமைத்து , தானே பாடப் போவதாக இன்றைய தினம் பிறந்த நாளைக் கொண்டாடும் பலர் பேசிக் கொள்வது என் காதில் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறது......)

சந்ரு, லேட்டா சொன்னாலும் லேட்டஸ்ட்ஆ சொல்லிட்டேன் இல்லையா????
(மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள், வெற்றியோடு உங்கள் வெற்றிப் பயணம் தொடர்வதற்கு......)

மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்!
அதுவரையில் நல்லதையே சிந்திப்போம்!......

வரட்டா!..............

உங்கள் நண்பன்
அபூ........

4 கருத்துகள்:

வால்பையன் சொன்னது…

நீங்க ஏன் பாலோயர்ஸ் வைக்கல?

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

நன்றி "வால்பையன் "

//நீங்க ஏன் பாலோயர்ஸ் வைக்கல?//

நானும் நிறைய முறை try பண்ணினேன். முடியல்ல. என்ன பண்ணலாம்னு நானும் யோசிச்சிக்கிட்டு இருக்கேன். "ஐடியா மணி " போல நல்ல ஐடியா ஒன்று கொடுக்கிறீங்களா?????

பெயரில்லா சொன்னது…

fantastic

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

//பெயரில்லா சொன்னது…

fantastic///

உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே....
அடிக்கடி வந்து போங்க!....