புதன், 17 பிப்ரவரி, 2010

கொஞ்சும் கவிதைகள்!...

(மீண்டும் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் பதிவுலகில் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. நேற்று இரவு கொஞ்சிக் கொஞ்சி என்னோடு பேசிய சின்னச் சின்ன சிந்தனைகளை கொஞ்சும் கவிதைகளாக இன்றைய பதிவில் உங்களுக்காய் பதிவிடுகிறேன். கவிமழையில் நனைந்து விட்டு உங்களுடைய கருத்துக்களை தெரிவியுங்கள். )


உருகும் மெழுகாயினும்
உள்ளம் மகிழ்கிறேன்!...
உயிர் துறப்பதெல்லாம்
உனக்காக வேண்டி என்பதால்!.....

*********************************************



நேசம் கொண்டாய்
நேசிக்க மறுத்தேன்!........
நேர் கோடாய் நின்றாய்
நேரெதிரே நின்றேன்!......
நேற்றுத் தான் நேசம் என்பதை உணர்ந்தேன்
நேரம் பார்த்து வந்த உன் மரணச் செய்தி கேட்டு!......


***********************************************************************



அழகிய பூக்கள் அத்தனையும்
அசிங்கமாய் தோன்றுகிறது!......
அயலாரிடம் வினவினால்
அப்படி இல்லை என்கிறார்கள்!...
அடியேன் இன்னும் உணரவில்லை....
அனல் தெறித்த உன் பார்வை
அம்புகள் தான் என் கண்ணில் இன்னும்
அடாவடித் தனம் புரிகிறது என்பதை!........


********************************************************





வானவில்லின் வர்ணத்தை
வார்த்தெடுத்து வரைந்திட்ட
வான்மதியே!.......
வாழ்வியல் சோதனையில்
வாலிப கோளாறு
வாட்டி வதைக்கிறது
வாட்டசாட்டமான உன் உருவம் பார்த்து!.....
வாராயோ.. நீயும் என்னில் காதல் கொள்ள!......


****************************************************************




முந்தானையால் முடிச்சுப் போட்ட நீ
முகத்திரை கிழித்து - என்
முகம் பார்ப்பது எப்போது?....
முடியவில்லை!.....
முக்காடிட்ட உன்
முறுவல் காணாமல்
முக்கால் மணி நேரம் கூட இருக்க!......
முல் வேலிக்குள் அடை பட்டு
முடங்கிக் கிடக்கிறேன்!.....
முதுமை அடையுமுன்
முழு சம்மதத்தோடு - காதல்
முகவரி கொடு சிநேகிதியே!.......

********************************************

(சரி, கவி மழையில் நனைந்து விட்டீங்களா?...... எப்படி இருந்தது என்று உங்கள் கருத்தை கட்டாயம் சொல்லி விடுங்க. சில நாட்களாக என் பாடசாலை நண்பர்கள் ஏராளமானவர்களை முகப் புத்தகம் வாயிலாக சந்தித்து வருவதில் பெரிய சந்தோசம். ஏனெனில் என் கலைத் துறையின் வளர்ச்சிக்கு என் குடும்பத்திற்கு பின்னர் மூல காரணமாக இருந்தவர்கள் என் பள்ளித் தோழர்கள் தான். கோடான கோடி நண்பர்களே. ) - (ஆசை FM ல் மறுபடியும் திரைப் படத்திலிருந்து "நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் " பாடல் கேட்டுக் கொண்டே இந்தபதிவு.......)

மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம் !.......
அது வரையில் நல்லதையே சிந்திப்போம்!.....

அப்போ நான் வரட்டா!...

உங்கள் நண்பன்

அபூ!.....

16 கருத்துகள்:

Prapa சொன்னது…

//உருகும் மெழுகாயினும்
உள்ளம் மகிழ்கிறேன்!...
உயிர் துறப்பதெல்லாம்
உனக்காக வேண்டி என்பதால்!.....//

அபாரம்... அனுபவித்ததை தாறீங்க... போல .

Unknown சொன்னது…

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவினை பார்த்தது மிகுந்த மகிழ்ச்சி
. அருமையான கவிதை வரிகள்.

SUFFIX சொன்னது…

வாருங்கள், நலமா? படங்களும், கவிதை வரிகளும் நல்லா இருக்கு.

சீமான்கனி சொன்னது…

//நேசம் கொண்டாய்
நேசிக்க மறுத்தேன்!........
நேர் கோடாய் நின்றாய்
நேரெதிரே நின்றேன்!......
நேற்றுத் தான் நேசம் என்பதை உணர்ந்தேன்
நேரம் பார்த்து வந்த உன் மரணச் செய்தி கேட்டு!......//

ரசித்தேன்...
வணக்கம் அபூ நலமா??
எல்லா கவிதையும் அருமை அபூ உங்கள் பதிவை மீண்டும் வாசிக்க கிடைத்ததில் மகிழ்ச்சி...

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

பிரபா கூறியது...

//உருகும் மெழுகாயினும்
உள்ளம் மகிழ்கிறேன்!...
உயிர் துறப்பதெல்லாம்
உனக்காக வேண்டி என்பதால்!.....//

////அபாரம்... அனுபவித்ததை தாறீங்க... போல .///

வாங்க தலைவா!.... எப்படி இருக்குறீங்க!....

இருக்கலாம்.... இல்லாமலும் இருக்கலாம்.....

ரொம்ப நன்றி உங்கள் வருககிக்கும், கருத்துக்கும் பிரபா....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

சிநேகிதி கூறியது...

/////நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவினை பார்த்தது மிகுந்த மகிழ்ச்சி
. அருமையான கவிதை வரிகள்.///

வாங்க அக்கா!... எப்படி இருக்கீங்க?.....

கொஞ்சம் பதிவு எழுவதை நிறுத்தி இருந்தேன். மீண்டும் ஆரம்பிக்கலாம் என முடிவு செய்து தான் இந்தக் கொஞ்சும் கவிதைகள். இனி இறைவன் நாடினால் அடிக்கடி சந்திக்கலாம் அக்கா!.....

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்!....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

SUFFIX கூறியது...

////வாருங்கள், நலமா? படங்களும், கவிதை வரிகளும் நல்லா இருக்கு.///

நான் ரொம்ப நலமாக இருக்கேன். உங்களுடைய சுகம் எப்படி அண்ணா!.... பதிவேளுதா விட்டாலும் உங்களுடைய பதிவுகளை படிக்க மறந்ததில்லை அண்ணா....

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்!.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

seemangani கூறியது...

//நேசம் கொண்டாய்
நேசிக்க மறுத்தேன்!........
நேர் கோடாய் நின்றாய்
நேரெதிரே நின்றேன்!......
நேற்றுத் தான் நேசம் என்பதை உணர்ந்தேன்
நேரம் பார்த்து வந்த உன் மரணச் செய்தி கேட்டு!......//

/////ரசித்தேன்...
வணக்கம் அபூ நலமா??
எல்லா கவிதையும் அருமை அபூ உங்கள் பதிவை மீண்டும் வாசிக்க கிடைத்ததில் மகிழ்ச்சி...///

வணக்கம் சீமாங்கனி,


நான் ரொம்ப நலம். உங்கள் நலம் எப்படி? இனி அடிக்கடி பதிவுகளூடே சந்திக்கலாம்.

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்!,.....

நிலாமதி சொன்னது…

நலம் வாழ என் நாளும் என் வாழ்த்துக்கள். ( இதன் எழுத்துக்கள் நீலத்தில் இருபதால் சற்று கடினம் வாசித்து விடேன்) நீங்களும் நலமே வாழ என் வாழ்த்துக்கள். நீண்டநாட்களுக்கு பின் உங்கள் தரிசனம் அழகிய கவிதைகளோடும் படங்களோடும்.......மிக அழகாய் சுவையாய் இருக்கிறது. தொடர்ந்து வர வேண்டுமென விருப்புகிறேன். ...

RJ Dyena சொன்னது…

arumai thozha... kavithaikal aththanaiyum....varigal ungal sinthanaiyai minji vittana.....

excellent...

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

நிலாமதி கூறியது...

////நலம் வாழ என் நாளும் என் வாழ்த்துக்கள். ( இதன் எழுத்துக்கள் நீலத்தில் இருபதால் சற்று கடினம் வாசித்து விடேன்) நீங்களும் நலமே வாழ என் வாழ்த்துக்கள். நீண்டநாட்களுக்கு பின் உங்கள் தரிசனம் அழகிய கவிதைகளோடும் படங்களோடும்.......மிக அழகாய் சுவையாய் இருக்கிறது. தொடர்ந்து வர வேண்டுமென விருப்புகிறேன். ...//



வணக்கம் அக்கா, நான் நல்ல சுகம். உங்கள் சுகம் எப்படி? வீட்டில் எல்லோரும் நல்லா இருக்காங்களா?.

நீங்கள் எதிர் பார்ப்பது போன்று இனி அடிக்கடி பதிவுகள் தொடரும் அக்கா..

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்!.......

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன் கூறியது...

/////arumai thozha... kavithaikal aththanaiyum....varigal ungal sinthanaiyai minji vittana.....

excellent...////

வாங்க டயானா... எப்படி சுகம்?. (உங்களுடைய நலத்தை Hello Shakthi நிகழ்ச்சியிலும் அறிந்து கொண்டுதான் இருக்கிறேன் ) முதல் முறையாய் பின்னூட்டல் எழுதி இருக்கின்றீர்கள்.

ரொம்ப நன்றி டயானா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்!...... அடிக்கடி வந்து போங்க!......

சிநேகிதன் அக்பர் சொன்னது…

கவிதைகள் அருமை நண்பரே.

நட்புடன் ஜமால் சொன்னது…

முதல் எழுத்தில் காதல் வரிகள்

முதல் எழுந்ததும் காதல் தானே

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

அக்பர் கூறியது...

///கவிதைகள் அருமை நண்பரே.////


ரொம்ப நன்றி அக்பர் அண்ணா உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும்.....

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...

/////முதல் எழுத்தில் காதல் வரிகள்



அண்ணா!.... முதல் முறையா பின்னூட்டல் எழுதி இருக்கீங்க...... ரொம்ப நன்றி அண்ணா...... ( ////முதல் எழுந்ததும் காதல் தானே/// ஆனால் இப்படி ஒரு கேள்வி?????????லொள்.....)