வெள்ளி, 29 மே, 2009

ரொம்ப நன்றி!!!!!!

நேற்றைய தினம் ( மே 28) என்னோட பதிவுக்குள் வருபவர்களுக்காக ஒரு கேக் வைத்திருந்தேன். பதிவுக்குள் வந்து சாப்பிட்டு சென்றவர்களுக்கும், விடயம் அறியாமல் சாப்பிட மாட்டோம் என்று அடம் பிடித்தவர்களுக்கும் என்னோட இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சரி, மேட்டருக்கு வருவோமா?

ஏன் கேக் வைத்திருந்தீங்கன்னு சொல்லி நிறைய பேர் கேட்டாங்க. இது தான் விஷயம். நேற்றைய தினம் என்னோட பிறந்த நாள். (எத்தனயாவதா? ஏன்?............ ஏதாவது மேலதிக ஏற்பாடுகள் பண்ணப் போறிங்களோ? வேணாம்................ அது எல்லாம் கைவசம் இருக்குதுன்னு சொல்லி பின்னாடி இருந்து யாரோ சொல்வது போன்ற ஒரு எண்ணம்... சத்தம்...திரும்பி பார்தேனா!!! காதல் தோட்டத்தில் கனவு தேவதை. )

பிறந்த நாளுக்காக வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட நண்பர்கள், புதிதாக அறிமுகமாகிய வலையுலக நண்பர்கள், குடும்பத்தினர், என்னோட நேயர்கள் அனைவருக்கும் இன்றைய பதிவில் நன்றி சொல்கிறேன். (அட நன்றி சொல்வதற்கு தானே இன்றைய பதிவே............) SMS, E-mail , calls னு சொல்லி நிறைய வாழ்த்துக்கள். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. சென்ற வருடம் இதே நாள் தான் (மே 28 ) எனக்கு vasantham FM ல் முதலாவது நேர் முகத் தேர்வு இடம் பெற்றது. நேரடி ஒலிபரப்பில் தான் எனக்கு தேர்வு. அப்பொழுது நான் முதலாவது சொல்லிய வார்த்தை நேரம் 5 மணி 31 நிமிடம். கடந்த வருட பிறந்த நாள் பரிசாய் இறைவன் எனக்கு அளித்த அந்த பரிசை நினைத்து இன்று சில கனம் சந்தோசம் கொண்டேன். வந்த வாழ்த்துக்களை திரும்ப திரும்ப வாசித்தேன். (வேற வேல இல்லையா? ஹே..... அப்படியெல்லாம் கேட்கக் கூடாது......நான் என்ன வேல வெட்டி இல்லாதவனா? ஹி......ஹி............)

என்னோட நேயர்கள் நிறைய பேர் SMS மூலம் வாழ்த்துக்களை அனுப்பி இருந்தார்கள். அதில் இருந்த சந்தோசம் என்ன தெரியுமா? நான் நேயர்களோட மனசில இடம் பிடித்தேனோ? இல்லையோ? என்னோட நிகழ்ச்சி அவர்களுக்கு பெரிய திருப்பு முனையைக் கொடுத்திருந்தது. ஏன் தெரியுமா? "Fun Box நாயகனுக்கு இனிய பிறந்த்த நாள் வாழ்த்துக்கள் ", "சந்தோஷ Safras கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். " இது தான் அதிகமாக வந்திருந்த SMS. நான் கூடுதலாக பண்ணிய நிகழ்ச்சி "Fun Box ", "சந்தோஷச் சாரல் ". இரண்டு நிகழ்ச்சிகளையும் நேயர்களின் ரசனைக்கு அமைவாக கொடுத்திருக்கிறேன் என்கிற சந்தோசம் என்னில் அதிகமாகவே இன்று இருந்தது.

இனி இன்னக்கி கொஞ்சம் வித்தியாசமா என்னோட பக்கம் இருக்குதேன்னு சொல்லி நீங்க வித்தியாசமா பார்க்கிறது எனக்கு விளங்குது. என்னோட பிறந்த நாள் பரிசாய் எனக்கு கிடைத்த Design தான் அது. என்னோட Accomadation இருக்கும் றிஸ்மி, அரபாத் இருவருமே நேற்று விழித்திருந்து எனக்கு Surprise கொடுக்கிறதுக்கு அவங்க கொடுத்த நினைவுப் பரிசு தான் அது. (அப்போ .... நான் என்ன Treat கொடுத்தேனா? இப்போ சொல்ல மாட்டேனே.....!!!! ) ரொம்ப நன்றி நண்பர்களே......

மீண்டும் மீண்டும் சொல்றதுன்னா வாழ்த்துக்களைப் பரிமாறிய அத்தனை உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்....(நாங்க இனி தானே வாழ்த்து சொல்லப் போறோம். எங்களுக்கு?????....... உங்களுக்கு தானே முன்னைய பதிவில் கேக் வெச்சிருக்கேன். கேக்க சாப்பிட்டோமா......தண்ணியக் குடித்தொமானு சொல்லி அச்சா புள்ள........ஒரு சின்ன கடி தான்... வேற ஒன்னும் இல்லவே இல்லீங்கோ....) அனைவருக்குமே இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றிகள்....

மற்றுமொரு பதிவில் சந்திப்போம்......
அதுவரையில் நல்லதையே சிந்திப்போம்.....

வரட்டா.............

உங்கள் வார்த்தைக்குள் சிக்கும் இள ரத்தம்

அபூ.....



கருத்துகள் இல்லை: