வியாழன், 21 மே, 2009

Sun டிவிக்கு ஒரு சபாஷ்!!!


வழமைக்கு மாறாக நேற்று கொஞ்சம் டிவிக்கு முன்னாள் உட்கார வேண்டி நேர்ந்தது. கொஞ்சம் வீட்டு சிந்தனை, நண்பர்கள் பற்றிய சிந்தனை, 28 ம் திகதி பிறந்த நாள் வேறு, ...... இப்படி பல சிந்தனைகள் என்னில் ஆட்டம் போட இரவு 9.30 க்கு வேறு வழியின்றி Sun டிவிய பார்க்கலாம்னு உட்கார்ந்தேன். என்னை அறியாமலே எனக்குள் சின்ன சந்தோசம். ஏன் தெரியுமா? அப்பொழுது தான் ஆரம்பமாகிறது "திரைத் தென்றல் " என்கிற ஒரு நிகழ்ச்சி. முதல் பாடலே "உள்ளம் கேட்குமே....." திரையிலிருந்து " மனமே..... " என்கிற பாடல். அடுத்தடுத்து ஒளிபரப்பாகியதே பாடல்.... அத ஏன் கேட்குறீங்க? படு சூபெருங்க.

********************************************************************
கவிதைகள் சொல்லவா?................. நீ இல்லை நிலவு இல்லை....... என்னைக் காணவில்லையே நேற்றோடு..... சொல்லத் தான் நினைக்கிறேன்........ காதலா.... காதலால் தவிக்கிறேன்........ சொல்லாயோ சோலைக்கிளி......... மெல்லினமே..... மெல்லினமே...... சந்தனத் தென்றலை........ மின்னலே......... நீ வந்து போனதேனடி..... கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை..... காதல் மழையே....... காதல் வந்தால் சொல்லியனுப்பு..... (நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கு ஒரு ..... போடு......)

*********************************************

இப்படியே தொடர்ந்த பாடல் தெரிவுகள் இரவு 11.57 ஐத் தாண்டும் போது "முதலாம் சந்திப்பில் நான் அறிமுகமானேனே......." என்ற பாடல் வரிகளைக் கொண்டு ஆரம்பிக்கத் தொடங்கிற்று. ஆஹா................கிளம்பிட்டான்யா!!!!!......

நம்மளோட flash back . .........

மறக்காலாம்னு நினைத்திருந்த நினைவுகள் மனதில கதிரை போட்டு அமர்ந்து கொண்டது. (என்னங்க இந்த காதல்.... கத்தரிக்கா..... புடலங்கா.....இதுவெல்லாம் எனக்கு தெரியாதுன்னு சொல்ற காலம் மலையேறி போயிடுச்சாம். இனி என்ன..........) ரொம்ப சின்ன புள்ள தனமாவே இருந்தது பழைய நினைவுகள். நான், அவள், அது, இதுன்னு சொல்லி நிறைய நினைவுகள்........அது எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். அது நமக்குள் மாத்திரம். (அதுக்காக யாரு அது? அவள்? இது? என்றெல்லாம் கேட்கக் கூடாது. ஐயோ ரொம்ப வெட்கமா இருக்கு!.... OK)

இனித் தாங்க ஒரு பெரிய matter நடந்தது. எங்களோட Accommodation ல இருக்கிற நான்கு பேரும் சேர்ந்து தான் டிவி பார்த்தோம். அப்போ கொஞ்சம் ஜாலியா இருக்கிற நேரம் இல்லையா? அதனால ஒரு சின்ன விருந்து. அது என்னதுன்னா வாழ்க்கையில சமையலே தெரியாத நான் தெரிந்த மாதிரி ஆப்பிள் ஜூஸ் போட்டது தாங்க. 5 ஆப்பிள் பழத்துக்கு ஒரு கிலோ சீனி வீதம் போட்டு ஒரு ஆப்பிள் ஜூஸ். இத நான் பண்ணியது கொடும இல்லீங்க!.. இந்த ஜூஸ்ஸ சீனி வருத்தம் உள்ள ஒருத்தருக்கு சுவை பார்க்க கொடுத்தது தான் மிகப் பெரிய விஷயம். அவர் அதக் குடிக்க....... பின்ன தலையில கைய அடிக்க,..... நாம் விழுந்து விழுந்து சிரிக்க........ இப்படின்னு இருக்க எல்லாம் தனக்கு தெரியும்னு நினைத்து மற்றைய நண்பர் Egg Coffee (முட்டைக் கோப்பி...) போடலாம்னு எழுந்து போயிட்டு அவர் போட்டாரே Coffee..... (என்னோட ஆப்பிள் ஜூஸ் ரொம்ப பிரமாதம்.) இத மட்டும் தான் இப்போதைக்கு என்னால சொல்ல முடியும். அப்போ Coffee..... அது சுத்த வேஸ்ட்....... (இது என்னோட நண்பனுக்கு தெரியாதே...... ஹி.....ஹி.........ஹி.......)

என்னதான் இருந்தாலும் எல்லா விஷயத்துலயும் நம்ம பெண்களோட போட்டி போடலாம். ஆனா இந்த சமையல், சமையலறை பெண்களே................ மணிகளே...... உங்களோட ரொம்ப கஷ்டம்க இந்த விசயத்துல போட்டி போட்றது. வாழ்த்துக்கள் தாய்க்குலமே..... உங்கள் சேவை எம்போன்ற ஆண் மக்களுக்கு தொடர.......

எல்லாம் பேசி ஜாலியா இருந்துட்டு தூங்கப் போற நேரம் பார்த்து நண்பர்கள் தூக்கிப் போட்டாங்களே பெரிய பாறான்கல்ல தலையில........(என்ன கொடுமையா...? சொல்றேங்க ....... கேளுங்க.....) 28 ம் திகதி பிறந்த நாளன்னக்கி MC or KFC கூட்டி போய் party போடணுமாம்..நாடு இருக்கிற.....................(உஷ்..... அம்மாடி.... நான் எதுவுமே சொல்லல்லீங்க....) பார்ப்போம்.... இன்னும் 7 நாட்கள் இருக்குதில்லையா? ஆனா நான் பதில் எதுவுமே சொல்ல இல்ல. ஏன்னா "நான் எல்லாம் யோசிக்காம பேச மாட்டோம். பேசின பிறகு யோசிக்க மாட்டோம். " அது....... தெரிஞ்சிக்கோங்க...... (சு...சு.....சும்மா.........)

(அப்பா........ ஒரு மாதிரி ஒரு சின்ன மொக்கைப் பதிவு போட்டுட்டேனே...... ஹி.... ஹி....)

மற்றுமொரு பதிவில் சந்த்திப்போம். .... அதுவரையில் நல்லதையே சிந்திப்போம்......

(வந்தவங்க கொஞ்சம் கொட்டிட்டு போங்க ..... சமயல இல்லீங்க கருத்துக்கள.... ஆன்னா.... ஊன்னா எலாம் நினைவுக்கு வர்றது இந்த சமையல் தாங்க !... பரவைள்ள. உங்க கருத்த கொட்டிட்டு போங்க ....)

வரட்டா......

வித்தியாசத்துடன்
அபூ.......

கருத்துகள் இல்லை: